மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென் செக்ஸ் தொடக்கத்தில் 245 புள்ளிகள் சரிந்து,பின்னர் 216 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 66,024 புள்ளிகளில் நிறை வடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி முற்பகலில் 73 புள்ளி சரிந்து, பிறகு 60 புள்ளி உயர்ந்து மீண்டும் குறைந்தது. வர்த்தக நேர முடி வில் நிப்டி எந்த மாற்றமும் இன்றி 19,674 புள்ளி களிலேயே நிறைவடைந்தது.
வங்கக் கடலில் செப்.30 அன்று வடக்கு அந்த மான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாக வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் செப்.27 முதல் செப்.29 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தமி ழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மீலாடி நபியை முன்னிட்டு வரும் 27ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக் கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் தொடர்ந்து 2 படங்கள் (ஜவான், பதான்) ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய ஒரே இந்திய நடிகர் என்ற சாதனையை படைத்தார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலை யில், பாஜக எம்எல்ஏ நாகேந்திரனின் சகோத ரர் நயினார் வீரபெருமாள் அதிமுகவில் இணைய வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வேப்பேரி பகுதியில் சாலை யோரத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் நடராஜர் சிலையை கண்டெடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் (ஆஸ்திரேலியா - 144) வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை பெற்றார் தமிழ்நாடு வீரர் அஷ்வின்.
மதுரையில் மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதனன்று மாலை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக எடை(250 கிலோ) கொண்ட பச்சை நிற அனகோண்டா பாம்பு பிரேசிலின் போனிட்டோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.