தமிழ்நாட்டில் 23 தொழிலாளர் ஆந்திராவில் கைது
திருப்பதி, அக்.12- ஆந்திர மாநிலம் திருப்ப தியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாகக் கூறப் படும் சம்பவத்தில் தமிழ கத்தைச் சேர்ந்த 23 பேரை ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள், திருவண்ணாமலை, விழுப் புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் ஆவர்.
பாஜகவுடன் தொடர்பு: ஓபிஎஸ் ஒப்புதல்
சென்னை, அக்.12- பாஜகவுடன் தனது கட்சி மாநாட்டை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி கோயம்புத்தூரில் நடத்த உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள் ளார். “பா.ஜ.க.வுடன் தொட ர்பில் இருக்கிறோம். நட்பின் அடிப்படையில் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் உதவி
சென்னை, அக்.12- கன்னியாகுமரி மாவட் டம், கிள்ளியூர் தாலுகா, ஏழு தேசம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் எல்.லெரின்ஷோ, அக்.9ஆம் தேதி ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகி லிருந்து தவறி விழுந்து உயி ரிழந்தார். அவரது குடும்பத்தி னருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளிடத்தில் அமலாக்கத்துறை சோதனை
தஞ்சாவூர், அக்.12- தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில் அம லாக்கத்துறை அதிகாரி கள் வியாழனன்று சோதனை நடத்தினர். திருச்சென்னம் பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத் துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். அப்போது மணல் குவாரி யின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். இந்தச் சோத னை மத்திய காவல் படை யினர் துணையுடன் நடை பெற்றது.
அரியலூர் பட்டாசு விபத்து பலி 12 ஆக உயர்ந்தது
அரியலூர், அக்.12- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பட்டாசு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். காய மடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற னர். இவர்களில் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்த சரவணன் மகன் சுந்தர் சிகிச்சை பலனின்றி புதன் இரவு காலமானார். இதையடுத்து பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!
சேலம், அக். 12 - கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால், தமிழ்நாட்டின் மேட்டூர் அணை க்கு வரும் நீரின் அளவு, வியாழ னன்று காலை 9 ஆயிரத்து 345 கன அடியாக அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 163 கன அடி தண்ணீரே வந்து கொண்டி ருந்த நிலையில், இது புதனன்று 3 ஆயிரத்து 528 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையிலேயே, அது வியாழனன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 345 கன அடியாகி உள்ளது. இதனால், அக்டோபர் 10 அன்று 30.90 அடியாக சரிந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் அக்டோபர் 12 அன்று 33.10 அடி யாகவும், அணையின் நீர் இருப்பு 8.81 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப் பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வியாழக்கிழ மை மாலை நீர் வரத்து திடீரென 18,974 கனஅடியாக அதிகரித்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரண மாகவே இந்த திடீர் அதிகரிப்பு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். பிலிகுண்டுலு வழியாக 11ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளதாகவும் அவர்கள் தெரி வித்தனர். கர்நாடக அணைகளை பொறுத்தவரை 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர் மட்டம் தற்போது 98.4 அடியாகவும், 65 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை நீர்மட்டம் 56 அடியாகவும் உள்ளது.
பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 6 பேர் பலி; 100 பேர் காயம்
தில்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசா மின் காமாக்யாவை நோக்கி சென்ற “வடகிழக்கு சூப்பர் பாஸ்ட்” ரயில் புதனன்று இரவு பீகார் மாநி லத்தின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென ரயில் பெட்டி கள் தடம் புரண்டு, 21 ரயில் பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. ரயி லில் பயணித்தவர்கள் பெட்டிக்குள் ளேயே தூக்கி வீசப்பட்டார்கள். இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர் களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு வினர் உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மீட் கப்பட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்கு மாறு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அறிந்து கொள்ள 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 21 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ரூ.10 லட்சம் இழப்பீடு பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்க ளுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளராக குமரகுருபரன் நியமனம்
சென்னை, அக்.12- தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரி களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஜெ. குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:- வணிக வரித்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தீரஜ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செய லாளர் ஜெ. குமரகுருபரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சுற்றுலாத் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைப்பு
சென்னை, அக்.12- தமிழ்நாட்டில் ஆன்லைன் விளை யாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து அமைச்சர் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தை தடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் விதமாக, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப் படுத்துதல் சட்டம், 2022-ல் இயற்றப் பட்டது. அச்சட்டத்தின்படி, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணை யம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதீன், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.சி.சாரங் கன், கிண்டி பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சி.செல்லப் பன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி யின் ஓய்வுபெற்ற மருத்துவர் ஓ.ரவீந்தி ரன், இன்கேஜ் குழு நிறுவனர் விஜய் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வு
சென்னை, அக்.12- சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை வியாழனன்று (அக்.12) சவர னுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரனுக்கு 43,280 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைவதும், பின்னர் அதி கரிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம்
சென்னை, அக்.12- கடலூர் சாலை விபத்தில் உயிரி ழந்த கல்லூரி மாணவரின் குடும்பத் திற்கு முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், தேவனாம் பட்டினம் கிராமம் கடற்கரை சாலை யில் அக்.11 அன்று அப்பகுதியி லுள்ள கலைக்கல்லூரி மாணவர் கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோ வில் கடலூருக்கு வந்து கொண்டி ருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி வட்டம், சிறுவத்தூர் (அ) மணப் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(20) என்ற மாண வர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த கல்லூரி மாணவன் தமிழ்ச்செல்வன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரி வித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
5 மாதங்களில் அரசின் வருவாய்-செலவு அதிகரிப்பு
சென்னை,அக்.12- நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் வரையி லான காலத்தில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.63 ஆயிரத்து 212 கோடியாக வும், வரியில்லாத வருவாய் ரூ.5 ஆயிரத்து 54 கோடியாகவும், ஒன்றிய அரசின் வரிகளின் பங்கு ரூ.15 ஆயிரத்து 601 கோடியாகவும், ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.9 ஆயிரத்து 100 கோடியாக வும் உள்ளன. மொத்த வருவாய் வரவுகள் ரூ.92 ஆயிரத்து 967 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது, வருவாய் வரவுகள் 1.26 விழுக்காடு கூடுதலாகும். கடந்த 5 மாத காலத்தில் தமிழ்நாடு அரசின் செலவினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 582 கோடியாகும். இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட வருவாய் கணக்கு செலவினம் ரூ.97 ஆயிரத்து 1 கோடியாகும். நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் ஊதியங்கள், கல்விக்கான அரசின் மானிய உதவிகள் உள்ளிட்டவற்றுக்காக மட்டும் ரூ.33 ஆயிரத்து 683 கோடி செலவிடப் பட்டுள்ளது. ஓய்வூதியங்கள், ஓய்வுக் கால பயன்களுக்காக ரூ.16 ஆயிரத்து 241 கோடி, ஊதியம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்காக ரூ.4 ஆயிரத்து 381 கோடி, உதவித் தொகைகள்-நிதி மாற்றங்களுக்காக ரூ.38 ஆயிரத்து 164 கோடி, வட்டி செலுத்து தலுக்கு ரூ.17 ஆயிரத்து 930 கோடி, ஏனைய செலவுகளுக்காக ரூ.3 கோடி என மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 582 கோடி செல வாகியுள்ளது. கடன் திரட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பு, மாநில மொத்த உற்பத்தி மதிப் பீட்டில் 3.25 விழுக்காடாகும். கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுதல் மற்றும் நிதி ஒருங் கிணைப்பு நடவடிக்கைகள் மூலம், நிதிப் பற்றாக்குறை மற்றும் கடனுக்கான வரம்பு களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசு முயற்சித்து வருகிறது என்றும் சட்டப்பேர வையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.