பிரதமர் மோடி ஜூன் 20-இல் அமெரிக்கா, எகிப்து பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. நியூயார்க்கில் ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலை மையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மோடி, ஜூன் 22 அன்று வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து உரையாடுகிறார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்விலும் பிரதமர் மோடி உரையாற்றஉள்ளார்.
குஜராத்தில் பிபர்ஜாய் புயலுக்கு 2 பேர் பலி; 22 பேர் காயம்!
10 நாட்களுக்கும் மேலாக மிரட்டிக் கொண்டிருந்த ‘பிபர்ஜாய்’ புயல், வியாழனன்று நள்ளிரவில், குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜ ராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது கனமழையுடன், மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில், ஏராளமான மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள், 524 மரங்கள் வேறோரு சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சுமார் 940 கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இந்நிலையில், புயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்; 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 23 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்று மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முழுமையான விவரங்கள் விரைவில் தெரியவரும் என குஜராத் மாநில நிவாரண ஆணையர் அலோக் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை : பிரதமர் வாய் திறக்காதது ஏன்?
“மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒன்றரை மாதமாக வாய் திறக்காத பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று வடகிழக்கு இந்தியாவுக்கான பெண்கள் சமாதானக் குழு வலியுறுத்தியுள்ளது. “மணிப்பூர் வரலாற்றில் தற்போதைய சூழல் ஒரு இருண்ட காலம்” என்றும் வடகிழக்கு இந்தியாவுக்கான பெண்கள் அமைதி குழு கூறியுள்ளது.
2020 வன்முறை: தில்லி போலீஸ் நடத்தியது இரக்கமற்ற விசாரணை
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, தில்லியில் 2020 பிப்ரவரி 23 முதல் 27 வரை இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அப்போது, போராடியவர்கள் மீது, ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றின. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், “தில்லி போலீசாரின் விசாரணை இரக்கமற்றதாக உள்ளது; சாட்சியங்கள் நம்பகமானதாக இல்லை; ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் 3 பேரின் பெயர்கள் எப்ஐஆரில் இல்லை; அவர்களின் வீடியோ காட்சிகளோ, புகைப்படங்களோ இல்லை; போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளனர்” என்று கடுமையாக சாடியுள்ளது.
பொது சிவில் சட்ட விவகாரத்தில் மடாதிபதிகளை இழுப்பதேன்?
பொது சிவில் சட்டம் தொடர்பாக, சட்ட ஆணையம் மூலம் கருத்துக் கேட்பில் இறங்கியுள்ள மோடி அரசு, “மதம் சார்ந்த நிறுவனங்களும் கருத்து தெரிவிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளது. இதற்கு பாரத் ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். “மடாதிபதிகள் பூஜைகள் உள்ளிட்டவைகளை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். பொது சிவில் சட்டத்துக்கு ஏன் மடாதிபதிகளிடம் கருத்து கேட்க வேண்டும். இது தவறான முன்னுதாரணம்” என சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்: நிதிஷ் கணிப்பு
“பீகார் மாநிலத்தில், அனைத்து திட்டப் பணிகளையும் அதிகாரிகள் விரைவில் முடிக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை. அடுத்தாண்டுதான் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த ஆண்டு இறுதியில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்’ என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். “இது நடக்குமா என்பது எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் ஆளும் பாஜக நினைத்தால் எல்லாம் சாத்தியம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் நலத்திட்டங்களை செய்ய முடியாது. எனவே அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்று துணை முதல்வர் தேஜஸ்வியும், நிதிஷ் குமாரின் கருத்தை வழிமொழிந்துள்ளார்.
2024-இல் வென்றால் மோடி தன்னை ராஜாவாக அறிவித்து விடுவார்
“2024 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடவில்லை என்றால், அதன் பின்னர் நாட்டில் தேர்தலே நடக்காமல் போகலாம் என்பதுதான் இப்போதிருக்கும் பெரிய பிரச்சனை. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை பார்க்கும் போது, 2024-இல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், அரசியல் சட்டத்தை மாற்றி அறிவிப்பார். உயிருடன் இருக்கும் வரை, இந்த நாட்டின் ராஜா என்று தன்னை பிரகடனம் செய்வார். எண்ணற்ற மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து பெற்ற, இந்த நாட்டின் சுதந்திரம் பறிக்கப்படும்” என்று தில்லி அமைச்ச ரும், ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.
பாஜக, தெலுங்குதேசத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பவன் கல்யாண்
ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 70 தொகுதிகளையும், 25 மக்களவைத் தொகுதிகளில் 10 தொகுதிகளையும் பாஜக - ஜனசேனாவுக்கு ஒதுக்குவதாக அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரிடம் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. “மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். எனது பிள்ளைகளுக்காக சேர்த்த சொத்துக்களை விற்று கட்சி தொடங்கி நடத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்எல்ஏ-க்களுடன் நுழையும். தேவைப்பட்டால் முதல்வராக அமர்வேன்” என்று பேசி, நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சிபிஐயும், அமலாக்கத்துறையும் பாஜக-வின் சேனா ஆகிவிட்டன
“ஒரு காலத்தில் சிபிஐ-யோ அல்லது அமலாக்கத்துறையோ யாரையாவது ரெய்டு செய்தால், அந்த நபர் ஏதாவது தவறு செய்திருக்கலாம் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், ஊழல் செய்யாத நபர்களைத்தான் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்யும் என்று மக்களே நம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ‘பாஜக சேனா’ என்று அழைக்கப்படுகிறது. அவை இனி விசாரணை அமைப்புகள் அல்ல. அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் ஊழல்வாதிகளுக்கு எதிராக அனுப்பப்படவில்லை என்பதை நாடு முழுவதும் பார்க்கிறது. மாறாக எங்கு பார்த்தாலும் ஊழல்வாதிகள் பாஜக-வில் தஞ்சம் புகுந்துள்ளனர்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
2,800 பேர் ஹஜ் பயணம்
சென்னை, ஜூன் 16- தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 2,800 இஸ்லாமியர் கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். புனித ஹஜ் பயணம் மேற்கொள் ளும் 260 பயணிகளை வழியனுப்பதற் காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூன் 16 வரை 14 விமானங்களில் 2800 இஸ்லா மியர்கள் புனித ஹஜ் பயணம் மேற் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 1200 பயணிகள் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்”என்றார்.
காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
சென்னை, ஜூன் 16 தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி வெள்ளியன்று(ஜூன் 16) சென்னை அருகே கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்தி வாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. இதனை காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால் வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறு கிறது. இந்த போட்டிகள் சனிக்கிழமை (ஜூன் 17) வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை,ஜூன் 16- சவுக்கு சங்கர் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங் களில் அவதூறு கருத்துக்களை தெரி வித்து வருவதாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தர விட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெள்ளியன்று தீர்ப்பளித்தார். மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, இனி கருத்துக்களை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.