states

இந்தியாவின் ‘நவீன துக்ளக்’ பிரதமர் மோடி

புதுதில்லி, மே 20 - 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள்,  புழக்  கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவ தாகவும், செப்டம்பர் 30-க்குப் பிறகு, இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் ஒன்றிய பாஜக அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்திருப்பது கடும் விமர்  சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின்  நவீன துக்ளக்தனம் என்று அரசியல்  கட்சித் தலைவர்கள் பலரும் காட்ட மாக சாடியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: செய்தபிறகு யோசிக்கும் அதிபுத்திசாலி: ஜெய்ராம் ரமேஷ் “2016-ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, துக்ளக் பாணி பேரழிவு  நடவடிக்கைக்குப் பிறகு பெரும் ஆர வாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப்  பெறப்படுகின்றன. இது, தன்னைத் தானே ‘விஸ்வகுரு’ என்று சொல் லிக்கொள்பவரின் வழக்கமான பாணி.  ‘முதலில் செய்துவிடு, பிறகு யோசி’ என்ற அவரது பாணியை இது காட்டு கிறது” என்று காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்குத்தான் ‘படித்த’வர் வேண்டுமென்பது: கெஜ்ரிவால் “முதலில் 2000 ரூபாய் நோட்டைக் கொண்டு வந்தால் ஊழல் ஒழியும் என்ற னர். இப்போது, 2000 ரூபாய் நோட்டைத்  தடை செய்வதன் மூலம் ஊழல் தடுக் கப்படும் என்கின்றனர். இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். படிக்  காத பிரதமரிடம் யாரும் எதுவும் சொல்லிவிட முடியும். அவருக்கு எது வும் புரியாது. பொதுமக்கள்தான் கஷ்  டப்படவேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலடித்துள்ளார்.

2000 ரூபாயை அச்சிட ஆன செலவு எவ்வளவு?- துஷார் காந்தி

“2000 ரூபாய் மதிப்புடைய நோட்டு  என்பது முட்டாள்தனமான நடவடிக்கை.  இந்த நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விட எவ்வளவு செலவானது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை, இன்றைய நவீன துக்ளக் தனது முட்  டாள்தனங்களில் இருந்து தப்பிக்க முடியாது” என்று மகாத்மா காந்தி யின் பேரனும், சமூக செயற்பாட்டாளரு மான துஷார் காந்தி விமர்சித்துள்ளார்.

1000 ரூபாய் நோட்டு வந்தாலும் வரலாம்: ப.சிதம்பரம்'

“எதிர்பார்த்தது போலவே, அர சாங்கமும் ஆர்பிஐ-யும் 2000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெற்று, நோட்டுக் களை மாற்ற, செப்டம்பர் 30 வரை அவ காசம் அளித்துள்ளது. அதிக மதிப்புள்ள  2000 ரூபாய் நோட்டு சிறந்த பரிமாற்ற  ஊடகம் அல்ல என்று 2016 நவம்பரில்  நாங்கள் சொன்னோம், அது சரியென்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 பணமதிப்பு நீக்கம்  என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ. 2000 நோட்டு கொண்டு வரப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்  யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு,  அரசாங்கமும் ஆர்பிஐ-யும் ரூ. 500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்  போது, 1000 ரூபாய் நோட்டை அர சாங்கமும், ஆர்பிஐ-யும் மீண்டும் அறி முகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். பணமதிப்பு நீக்கம் முழு வட்டத்திற்கு வந்துவிட்டது!” என்று பதிவிட்டுள்ளார்.

தோல்விகளில் இருந்து திசைதிருப்ப தந்திரம் : சித்தராமையா

“பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை  திருப்பவே இந்த முயற்சி. 2000 ரூபாய்  நோட்டை இப்போது நிறுத்த வேண்டும்  என முடிவெடுக்கப்பட்டது என்றால்,  2016-இல் ஏன் அறிமுகப்படுத்தப்பட் டது? பிரதமர் மோடியால் மீண்டும்  ஏன் ரூபாய் நோட்டுக்கள் தடை  செய்யப்பட்டுள்ளது. தங்கள் கொள்கை களிலேயே தெளிவில்லாமல் இருக்கும்  ஒரே ஆட்சி பாஜக ஆட்சி” என கர்நாடக  முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார். ஒற்றைத் தந்திரம்: மு.க.ஸ்டாலின் “500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள்  2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வி யை மறைக்க ஒற்றைத் தந்திரம்!” என்று  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.