சென்னை, மே 25 - கடந்த மூன்றாண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்துள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- கடந்த மூன்று ஆண்டுகளில் ஆந்திர எல்லை யோர மாவட்டங்களில் அமையப் பெற்றுள்ள இத்துறையின் அலகுகளின் செயல்பாடுகள் பின்வருமாறு: மே 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலக் கட்டத்தில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மொத்தம் 937 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 12540,87 குவிண்டால் பொதுவிநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.70,85,591.55 ஆகும். மேலும், இக்கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 211 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இவ்வழக்குகளில் தொடர்புடைய 836 குற்றறவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 23 நபர்கள் தடுப்புக் காவல் சிறையில் அடைக் கப்பட்டனர். அதேபோல், மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5809.38 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும், இக்காலகட்டதத்தில 138 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. குற்றங்களில் ஈடுபட்ட 538 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மே 2019 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 514 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு 2930.08 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இக்காலகட்டதத்தில 112 வாகனங்கள் கைப் பற்றப்பட்டது. இக்குற்றங்களில் ஈடுபட்டதாக 366 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் 11 நபர்கள் கைது செய்யப் பட்டனர். இனி வரும் காலங்களிலும் இத்துறையின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தல் மற்ற மாநிலங்க ளுக்கு செல்வதையும் மற்றும் வெளி மாநிலங்க ளிலிருந்து இம்மாநிலத்திற்கு கொண்டு வரப்படுவதையும் தடுப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.