states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மர்மகாய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி  

திருச்சி, செப்.15- திருவாரூர், திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகி னர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவராக கேர ளாவை சேர்ந்த சிந்து என்பவர் பணி யாற்றி வருகிறார். இவர் காய்ச்சல் காரணமாக வியாழனன்றுதான் பயிற்சி பெறும் மருத்துவமனை யிலேயே சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று உயிரிழந்தார்.  திருச்சி திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனக வல்லி (வயது 38). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம்  இல்லாததால் கனகவல்லி வியாழனன்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் வெள்ளியன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

வலதுசாரி வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

புதுதில்லி, செப். 15 - சாதிய, பாலின ஏற்றத் தாழ்வுகளை,  அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை களை கற்பிக்கும், பிற்போக்குக் கோட்பாடான சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அண்மையில் பேசியிருந்தார்.  ஆனால், சனாதனத்தைக் கடைப் பிடிக்கும் இந்துக்களை அனைவரை யும் உதயநிதி ஸ்டாலின், இனப்படு கொலை செய்ய வேண்டும் என்கிறார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா டுவிட்டர் பகிரங்க மாக ஒரு பொய்யைப் பரப்பினார். அந்த பொய்யைப் பிடித்துக் கொண்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி பாஜக தலைவர்கள் பலரும் வழக்கம்போல நாடுமுழுவதும் மதவெறியைத் தூண்டி வருகின்றனர். இவை ஒருபுறமிருக்க, பாஜக ஆதரவு வலதுசாரிகள் சிலர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு ஆதர வாக பேசிய கர்நாடக அமைச்சர் பிரி யங்க் கார்கே ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வலதுசாரிகளின் வழக்கறி ஞர்கள், வெள்ளியன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பு திடீ ரென ஆஜராகி, தங்களின் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டு கோபமடைந்த தலை மை நீதிபதி, “எந்த வழக்காக இருந்தா லும் உரிய வழிமுறையை பின்பற்ற வேண்டும்” என்று கூறி, “அவசர வழக்காக விசாரிக்க முடியாது” என்று அதிரடியாக நிராகரித்து விட்டார்.

மணிப்பூர் வன்முறையில் 175 பேர் பலி 96 உடல்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை

பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த 5 மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைக்கு இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஐஜி ஐ.கே.முய்வா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,”மணிப்பூர் வன்முறையில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ள  நிலையில், 76 உடல்கள் மட்டுமே உரிமை கோரப்பட்டுள் ளன. இன்னும் 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை. 96 உடல்களில் இம்பால் ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் 28 உடல்களும், ஜெஎன்ஐஎம்எஸ் மருத்துவமனையில் 26  உடல்களும், சுராசந்த்பூர் மருத்துவமனையில் 42 உடல் களும் வைக்கப்பட்டுள்ளன. 1,108 பேர் காயமடைந்துள்ள நிலையில், 32 பேர் காணாமல் போயுள்ளனர். கலவரத்தின்போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகளும், 15,050 வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. 254 தேவாலயங்கள், 132 கோவில்கள் என 386 வழிபாட்டுத்தலங்கள் கொளுத்தப்பட்டுள்ள நிலை யில், இதுவரை 5,712 தீ வைப்பு வழக்குகள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. வன்முறை தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பாதுகாப்பு நீடிக்கிறது” என அவர் கூறினார்.

ரூ.11,000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்

சுகோய் 30 எம்கேஜே வகையைச் சேர்ந்த 12 போர் விமானங்களை ரூ.11,000 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த சுகோய் 30 எம்கேஜே விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளதாகவும், விமானங்களின் பாகங்களில் 60சதவிகித இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பு 6 ஆக உயர்வு

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆட்கொல்லியான ‘நிபா’ வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதனால் கோழிக்கோடு மாவட்டம் கேரள மாநில சுகாதாரத்துறை தீவிர மருத்துவ கண்காணிப்பு பகுதியாக அறிவித்தது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 706 பேர் நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்புடைய நபர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளியன்று மேலும் ஒருவருக்கு (32 வயது நபர்) நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை நிபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் தன்மையுடையது. குறிப்பாக வியர்வை, உமிழ்நீர், ரத்தம் போன்றவற்றால் நிபா வைரஸ் மிக எளிதாக உடலில் தொற்றிக்கொள்ளும். இதனால் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோரை தொடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக கொரோனா முன்னெச்சரிக்கை போலவே முக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள் மிக அவசியமானது என ஐசிஎம்ஆர் தலைவர் ராஜீவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3ஆவது நாளில்  2 நிமிடங்களில் தீர்ந்தது ரயில் டிக்கெட்

சென்னை, செப்.15- பொங்கல் பண்டிகைக்காக ரயில்க ளில் டிக்கெட்டு கள் முன்பதிவுகள் 3வது  நாளாக வெள்ளியன்று (செப்.15) காலை 8 மணிக்கு தொடங்கி 2 நிமிடங்களிலேயே முடிவடைந்தது.  இதனால் வரிசையில் நின்றிருந்த தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள்  டிக்கெட் இன்றி வீடு திரும்பினர். 2024  ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி போகி, 15 ஆம் தேதி பொங்கல், 16 இல் மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி  காணும் பொங்கல் என தமிழர் திருவிழா  கொண்டாடப்படவுள்ளது. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னர் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன்படி ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய செப்.15  முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை  முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு  ரயில்வே அறிவித்தது. அதன்படி, ஜனவரி 13 ஆம் தேதி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் வெள்ளிக் கிழமை (செப்.15) காலை 8 மணிக்கு  தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய  2 நிமிடங்களிலேயே தென் மாவட்டங்க ளுக்கு செல்லும் ரயில்களுக்கு முன்பதிவு முடிந்தது. குறிப்பாக பொதிகை, பாண்டி யன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட  ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது.  காலை 8 மணி முதலே ஏராளமானோர்  முன்பதிவு செய்தால் அனைத்து டிக்கெட்டுகள் முன்பதிவு 2 நிமிடங்க ளில் விற்று தீர்ந்தன. அதன் பிறகு ஏ.சி. வகுப்பு போட்டி களுக்கான டிக்கெட் முன்பதிவு படிப்படியாக நடைபெற்றது. பலர் அதிகாலை 5 மணியில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்  நிலையங்களில் காத்திருந்து முன் பதிவு செய்தனர். ஆனால் இணைய தளத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் முன்பதிவு செய்ததால்  டிக்கெட் கவுண்டர்களில் காத்திருந்த  பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காத தால் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும் இனியாவது பண்டிகை காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலம் பதிவுக்கு சொத்துகளின் புகைப்படம்  இணைக்க வேண்டும்

சென்னை, செப்.15- பதிவுத் துறையில் போலியான ஆவணங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள் ளது. மேலும், கட்டிடங்கள் இருப்பதை  மறைத்து காலி நிலம் என்று ஆவணங் கள் பயப்படுவதால் அரசுக்கு வரு வாய் இழப்பு ஏற்படுகிறது. அனைத்து  சொத்துக்கள் தொடர்பான ஆவணங்க ளும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப் படம் இணைக்க வேண்டும். இது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் உத்தர விட்டுள்ளார்.

கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன: சங்கர் ஜூவால்

சென்னை, செப்.15- தென் மண்டலத்துக்கு உட்பட்ட  மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது என்று  தமிழ்நாடு காவல்துறை கண்காணிப் பாளர் சங்கர் ஜூவால் தெரிவித்துள் ளார். அதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதில், தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 2022 ஆகஸ்ட் வரையில் 364 கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன. அது இந்த ஆண்டில் 323ஆகக் குறைந்துள்ளன. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைக் குற்றச் செயல்கள் அதி கரித்து வருகின்றன என்று பரப்பப் படும் தகவல் தவறானது ஆகும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தென் மண்டலத்தில் இரு  வேறு சமூகத்தினர் இடையே நடை பெற்ற கொலை வழக்குகளை பொறுத் தவரை சென்ற 2022 ஆகஸ்ட் வரை யில் 82 வழக்குகளும், இந்த ஆண்டில்  74 வழக்குகள் பதிவாகி உள்ளன. எனவே சாதி ரீதியான கொலை வழக்குகளும் குறைந்துள்ளன. தொடர் கண்காணிப்பு மற்றும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. அவற்றை மேலும் கட்டுப்படுத்திட வாரந்தோறும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி: பாதுகாப்பு பணியில் 74,000 காவலர்கள்

சென்னை,செப்.15- தமிழ்நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதி பெற்று பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒலிபெருக்கியில் பாடல் ஒலிபரப்ப நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,   விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு  சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில், நீர்நிலை களில் கரைக்கும் வழக்கம் உள்ளது. எனவே, இந்த பணிகளில்  தமிழ்நாடு முழுவதும் 74,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படு கின்றனர்.

மகளிர் உரிமைத் தொகைக்கு யாரிடமும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம்: அரசு எச்சரிக்கை

சென்னை, செப்.15- தமிழ்நாடு மக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வெள்ளிக்கிழமை (செப்.15) தொடங்கப்பட்டது. அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சி புரத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கையேடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிருக்கு  தொகையை கையாள்வது குறித்து கையேடு  வழங்கப்பட்டது. அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய  வேண்டாம் என்றும் பொன் மகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகை ஏடிஎம் அட்டை, கடவு சொல் (பாஸ்வார்டு) வேறு யாருடனும் பகிர வேண்டாம் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளில் ஏடிஎம் விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் வங்கிகளில் இருந்து கேட்பதாக கூறி ஓடிபி அல்லது வங்கி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைவருக்கும் பணத்தை செலுத்த முடியாது என்பதால் தகுதியான பயனாளிகள் சிலருக்கு ஒரு நாள் முன்ன தாக செப்.14 அன்று  ரூ.1000 பணம் வரவு  வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப் பட்டு 5 நாட்களில், அதாவது செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். குறுஞ்செய்தி  இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை  திட்டம் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது  நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான எஸ்.எம்.எஸ் வரும் 18 ஆம் தேதி முதல் அனுப்பி  வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்யலாம் மேலும் விண்ணப்பம் ஏற்கப்படாத சூழலில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்  பெறப்பட்ட 30 நாட்களுக்கு இணைய சேவை  வாயிலாக கோட்டாட்சியருக்கு விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவை மீட்கும் வேட்கைத் தீ பரவட்டும்”

முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, செப்.15- இந்தியாவை மீட்கும் வேட்கைத் தீ பரவட்டும் நாடெங்கும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள்  அரசு விழாவாக கொண்டா டப்பட்டது. இதனையொட்டி காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலை மாநக ராட்சி வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காஞ்சிபுரம் மேயர், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். இந்நிலையில், முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “ பேரறிஞர் காட்டிய  பாதையில், கடமை ஆற்ற  கண்ணியம் தவறாது கட்டுப் பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம். எண்ணித்  துணிவோம், இந்தியாவை மீட்கும் வேட்கைத் தீ பரவட் டும் நாடெங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.