அசாம் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்!
அசாமில் சனிக்கிழமையன்று காலை 9.03 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் பிரம்மபுத்திரா ஆற்றின் தென் கரையில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள டிடாபார் அருகே 50 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சிவசாகர், கர்பி அங்லாங் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் மக்கள் அதிர்வை உணர்ந்ததாகக் கூறப்படு கிறது. அடுத்ததாக காலை 11.02 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகி யுள்ளது. இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்ராவின் வடக்குக் கரையில் உள்ள தர்ராங் மாவட்டத்தில் டல்பான் அருகே 9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. உடல்குரி, பக்சா மற்றும் சோனிந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி!
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. பர்சூ பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பீகாரைச் சேர்ந்த 4 பயணிகள் உயிரிழந்தனர். 28 பயணிகள் படுகாய மடைந்தனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: அமித்ஷா
“நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு சுமார் 126 மில்லியன் லிட்டராக உள்ளது. இது உலகிலேயே அதிக அளவாகும்” என்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற 49-ஆவது பால் தொழில் மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். “நாட்டின் வளர்ச்சிக்காக பால்பண்ணை துறையும் உழைத்துள்ளது. பால் துறை இந்தியப் பொருளாதா ரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். பால் துறையின் பங்களிப்பு ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. 45 கோடி மக்கள் அதனுடன் தொடர்புடையவர்கள்” என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
அக்னி வீரர்களுக்கு சிஐஎஸ்எப் படையில் இடஒதுக்கீடு!
ராணுவத்திற்கு நான்காண்டுகளுக்கு மட்டும் காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபாதை’ எனும் புதிய திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. நான்காண்டுகளுக்கு பின்னர் இந்த வீரர்கள் நிலை என்ன? என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அவர்களை சமாதானப்படுத்துவதற்காக, மத்திய துணை ராணுவப்படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவு ஆகிய வற்றில் காலியாக உள்ள 10 சதவிகித பணியிடங்களில், 75 சதவிகிதம் முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனொரு பகுதியாக, மத்திய தொழில் பாது காப்புப் படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடற்தகுதித் தேர்வில் விலக்குடன் கூடிய 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறி விக்கப்பட்டு உள்ளது.
ஆளுங்கட்சியே அமளியில் ஈடுபடுவது இதுதான் முதல்முறை!
“அதானியுடன் பிரதமரின் வெளிநாட்டு பயணம், துணை நிறுவனங்கள் மற்றும் எல்ஐசி பணம் இழப்பு ஆகியவை பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளு மன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை. நாங்கள் அவை யில் எழுப்பிய இந்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனம் திசை திரும்ப வேண்டும் என்ப தற்காக, நாடாளுமன்றத்தில் அவர்களே அமளியில் ஈடுபட்டும், குழப்பம் ஏற்படுத்தியும் வரு கின்றனர். ஆளுங்கட்சியே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அவை நடவடிக்கைகள் நடைபெறாமல் அமளியில் ஈடுபடுவது இதுவே முதன்முறையாகும்” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.
அரசு பங்களாவை காலி செய்ய சிசோடியா குடும்பத்துக்கு உத்தரவு
தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் முறைகேடு செய்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தில்லி மதுரா சாலையில் ஏபி-17 முகவரியில் சிசோடியா குடும்பம் வசித்து வந்த அரசு பங்களாவை மார்ச் 21-ஆம் தேதிக்குள் காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பங்களா புதிய அமைச்சர் ஆதிஷிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணத்திற்கு எதிராக பாஜக எம்எல்சி போராட்டம்
பெங்களூரு - மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி விரை வுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்ப ணித்தார். இதில் 6 வழி விரைவுச்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார் கள். இந்நிலையில் பாஜக எம்எல்சி விஸ்வநாத்தும், சுங்கக் கட்டண வசூலுக்கும், சொந்தக் கட்சி எம்.பி. பிரதாப் சிம்ஹாவைக் கண்டித்தும் 6 வழி விரைவுச் சாலையில் போராட்டம் நடத்தியுள்ளார்.
கர்நாடகம் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
பெங்களூர், மார்ச் 18- 25 சதவிகித சம்பள உயர்வு வழங்கக் கோரி, மார்ச் 21 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும் என்று கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ஏற்கெனவே ஊழியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன்பிறகே போக்குவரத்து ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். இதனிடையே மார்ச் 20 அன்று அரசுப் போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், இதில் தீர்வு எட்டப்படாவிட்டால் மார்ச் 21 முதல் வேலைநிறுத்தம் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் தில்லி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி ஆம் ஆத்மி எம்பி குற்றச்சாட்டு
புதுதில்லி, மார்ச் 18- தில்லி அரசை கவிழ்க்க மணீஷ் சிசோடியோ விவ காரத்தை வைத்து ஒன்று பாஜகவில் சேருங்கள், இல்லை யென்றால் சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் சிறை செல்ல நேரிடும் என பாஜகவினர், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை மிரட்டி வருகின்றனர் என ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ராகவ் சதா குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ராகவ் சதா கூறியதாவது: “துணை முதல்வரையே கைது செய்துவிட்டோம். நீங்கள் வெறும் எம்எல்ஏ-க்கள்தான். இரண்டு வழி களை வழங்குகிறோம். ஒன்று பாஜகவில் சேருங்கள். இல்லையென்றால் சிபிஐ-அமலாக்கத்துறை உங்களை சிறையில் தள்ளும் என பாஜக, ஆம் ஆத்மி எம்எல்ஏக் களை மிரட்டி வருகிறது. ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக் களும், பாஜகவுக்கு வெறும் 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தது போல தில்லியிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக நினைக்கிறது. பாஜக முதலில் இந்த அயோக்கியத்தன மான முயற்சிகளை நிறுத்த வேண்டும்” என ராகவ் சதா கூறினார்.
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
சென்னை, மார்ச் 18- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்க ளுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவு கிறது. இதன் காரணமாக, ஞாயிறன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சிமிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடையில் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெள்ளிக் கிழமை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஞாயிறு முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பரவலாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை கடும் உயர்வு
சென்னை, மார்ச் 18- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை (மார்ச் 18) சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து, 44,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் 5,560க்கும் விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் வெள்ளிக்கிழமை (மார்ச்.17) ரூ.25 உயர்ந்து 5,450 க்கு விற்பனையானது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.43,600 க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.40 க்கு, விற்பனை செய்யப்படு கிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி யின் விலை ரூ.1300 அதிகரித்து ரூ.74, 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருவள்ளூர், மார்ச் 18- கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஏ.டி.எம்.மில் சனிக்கிழமையன்று அதிகாலை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது தானியங்கி அலாரம் திடீரென ஒலித்துள்ளது. சுதாரித்துக் கொண்ட ஏ.டி.எம்.மைய நிர்வாக அலுவலர் காவல்நிலையத்திற்கு தக வல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் ஏ.டி.எம். மையத்தை நெருங்கும் போது 3 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் 7 மணிக்கு விரைந்து வந்து ஏ.டி.எம். மில் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதில் நல்வாய்ப்பாக ரூ.23 லட்சம் தப்பி யது.
முறைகேடு வழக்கிலிருந்து ஐ.பெரியசாமி விடுவிப்பு
சென்னை, மார்ச் 18- முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப் பட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவ லராக இருந்த கணேசன் என்பவ ருக்கு, ஒதுக்கியதாக புகார் தெரிவிக் கப்பட்டது. இது தொடர்பாக ஐ.பெரிய சாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்பட வில்லை. சந்தை விலைக்குதான் வீடு கள் விற்கப்பட்டது. இதில், அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை. மேலும் இந்த வழக்கைத் தொடர முறையான அனுமதி பெறவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரிய சாமியை விடுவித்து உத்தரவிட் டுள்ளார்.
பொதுத் தேர்வு எழுத 75 % வருகை பதிவேடு கட்டாயம்
தஞ்சாவூர், மார்ச் 18- வரும் கல்வியாண்டில் 75 விழுக் காடு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் தொடர்புத் துறை சார்பில், அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண் காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தற்பொழுது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனை வரும் 10ஆம் வகுப்பில் ஆல்பாஸ் ஆனவர்கள். அவர்களுக்கு தேர்வு பயம் என்பது கடந்த இரண்டு ஆண்டு களாக இருந்திருக்கும். எனவே, அனை வரும் தேர்வு எழுத வாருங்கள், அனை வருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் என கூறினோம். ஆனால், அடுத்த ஆண்டு இந்த நடைமுறை பின்பற்றப் படாது என்றார். ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது. கொரோனா காலத்தில் பள்ளிகள் முழுமை யாக செயல்படாமல் இருந்த நேரத்தில் அதுபோன்ற வாய்ப்பு அளிக்கப் பட்டது. வரும் கல்வியாண்டில் 75 விழுக்காடு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றார் அமைச்சர்.
பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி : புடின் உற்சாகம்
மாஸ்கோ, மார்ச் 18- 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடையும் என்று ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளைப் போட்டன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று மேற்கத்திய வல்லுநர்கள் கணித்தனர். மேலும், போரால் ஆகும் செலவை ரஷ்யாவால் சமாளிக்க முடியாது என்றும் கருதப்பட்டது. ஆனால், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று புடின் கூறியிருக்கிறார். ரஷ்யத் தொழில் அதிபர்கள் மற்றும் முனைவோர்கள் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய புடின், “நிலையான தொழிலாளர் சந்தை, குறைவான பணவீக்கம் மற்றும் அதிகமான ஊதியம் ஆகியவற்றால் ரஷ்யப் பொருளாதாரம் நேர்மறை வளர்ச்சியை எட்டி வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வரும் இரண்டாவது காலாண்டில் இருந்து வளர்ச்சியடையும்” என்று தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு இதே வேளையில் ஏராளமான தொழில் நிறுவனங்களை ரஷ்யாவில் இருந்து வெளியேறுமாறு மேற்கத்திய நாடுகள் நிர்ப்பந்தம் செய்தன. ஆனால், அமெரிக்க சந்தையில் இடம் இல்லாமலேயே ரஷ்யாவால் தனது வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கிறது. “ரஷ்யப் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என்று தொடர்ந்து தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வந்தவர்கள் ஏமாந்து போய்விட்டார்கள்” என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.