states

மாணவியின் செல்போனிற்கு ஆபாச வீடியோ: 2 பேர் கைது

சென்னை, மார்ச் 21- பள்ளி மாணவியின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்ய ப்பட்டுள்ளனர். சென்னை கொத்தவால் சாவடி பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை  செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போன் எண்ணிற்கு  திடீரென கடந்த மாதம் 28ஆம் தேதி முன்பின் அறிமுக மில்லாத எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்களும் புகை ப்படங்களும் வந்துள்ளன. தொடர்ந்து ஆபாச செய்தியும் வந்துள்ளது.  இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து தந்தை யிடம் கூறியுள்ளார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் துறைமுகம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆபாசமாக வீடியோக்கள் அனுப்பிய தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்தனர். அதில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது. மேலும் ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்து கொத்த வால்சாவடி பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் ரவி (19) கிரண் சிங் (23) என்பதும், சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை திருடி இருவரும் தவறாக சித்தரித்து வீடியோ அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது  செய்தனர்.