states

தீக்கதிர் விரைவு செய்திகள்

2,700 கன அடி நீர்திறக்க  ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

புதுதில்லி, நவ. 23 - காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 90-ஆவது கூட்டம், தில்லியில் வியாழக் கிழமை பிற்பகல் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நா டகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகம் பிரதி நிதிகள் பேசுகையில், நிலு வையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரையும் டிசம்பர் மாதத் துக்கான 7.35 டிஎம்சி நீரையும் வழங்கவேண்டும்’ என்று  கோரிக்கை விடுத்தனர். இறு தியில் தமிழகத்துக்கு விநா டிக்கு 2,700 கன அடி விகிதம் டிசம்பர் இறுதி வரை காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என்று  ஒழுங் காற்றுக்குழு பரிந்துரைத்துள் ளது.

ராஜஸ்தானில் பிரச்சாரம் ஓய்ந்தது

ஜெய்ப்பூர், நவ. 23- 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் சனியன்று (நவம்பர் 25) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வியாழனன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்தது. கடைசி நாளில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஆகி யோர் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டனர். 

வாச்சாத்தி வழக்கில் சரணடைந்த வனக்காப்பாளர் சிறையில் அடைப்பு

தருமபுரி, நவ. 23 - தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளா க்கிய வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் 269 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றமும், கடந்த 2023  செப்டம்பர் 29 அன்று உறுதி செய்தது.  இவர்களில், ஐ.எப்.எஸ். அதிகாரி களான எல். நாதன், பாலாஜி ஆகியோர்  உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறை யீட்டுக்குச் சென்ற நிலையில், அவர்களின் தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், இருவரும் 6 வாரங்களுக்குள் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியும் மூன்றாண்டு சிறைத்தண்டனை பெற்ற முதன்மை வனக்காப்பாளருமான பாலாஜி (66) தருமபுரி மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) மோனிகா, அரசு வழக்கறி ஞர் ரமேஷ்பாபு முன்னிலையில் புதன் கிழமை சரணடைந்தார். அதைத்தொடர் ந்து அவர், வேலூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

வடகிழக்குப்  பருவமழை   10% குறைவு!

சென்னை, நவ. 23 - தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடக்கத்தில் குறைவாக காணப்பட்டது. தற்போது, தென் தமிழகத்தில் பெரும் பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இருப்பினும், 123 ஆண்டுகளில் 9-ஆவது முறையாக இந்தாண்டு வட கிழக்குப் பருவமழை இயல்பை விட 10 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 1 முதல் நவம்பர் 23 வரை 317.4 மி.மீ மழை பதிவாக வேண்டிய நிலையில் 286.8 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மை யத்தின் தென்மண்டல  இயக்கு நர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.