சென்னை, செப்.24- தமிழகத்தில் அரசுப் பள்ளிக ளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்.15 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திட்டத்தின் செயல்பாடு குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா விளக்கினார். இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் தொலைபேசியில் முதல்வர் பேசினார். அப்போது ‘எத்தனை பேர் காலை உணவு சாப்பிட்டனர், நேரத்துக்கு வந்ததா, மாணவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டார்களா, ஏதேனும் புகார் இருக்கிறதா? என்றும் அவர் கேட்டார். தொடர்ந்து, பள்ளியின் தலை மையாசிரியை சுமதியிடம் பேசிய முதல்வர், தினமும் 36 பேர் சாப்பிடு கிறார்களா? உணவு தரம் நன்றாக இருக்கிறதா? என்று கேட்டார். அவர்கள் உரிய பதிலளிக்க அவற்றை குறித்துக் கொண்டார்.