தீவிரவாதி சுட்டுக்கொலை
கனடா, ஜூன் 19- கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் பஞ்சாப் மாநி லம் ஜலந்தரில் சாமியார் கமல்தீப் சர்மா என்பவரை காலிஸ்தான் ஆதரவு தீவிர வாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் கனடாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு தேடி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கனடாவில் பதுங்கியிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் சர்ரேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட காலிஸ்தான் தீவிரவாதிகளின் பட்டிய லில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் உட்பட 40 தீவிரவாதி களின் பெயர்கள் சேர்க்கப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டு சிறை
லண்டன், ஜூன் 19- இங்கிலாந்து நாட்டில் இளம்பெண்களை பாலி யல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரகு சிங்கமனேனி(50), வடக்கு லண்டனின் இஸ்லிங்டன் ஹாலோவே ரோடு, வூட் கிரீனின் ஹைரோடு ஆகிய இடங்களில் மசாஜ் பார்லர் நடத்தி வருகிறார். இவர் தனது மசாஜ் பார்லரில் 17 முதல் 23 வயது வரை யிலான நிறைய இளம் பெண்களை பணியில் சேர்த்துள்ளார். அந்த பெண் களை பாலியல் வன்கொ டுமை செய்து துன்புறுத்தி யுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் ரகு சிங்க மனேனிக்கு எதிராக வூட் கிரீன் கிரவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இதுதொடர்பான விசா ரணையில் ரகு சிங்கம னேனி குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வூட் கிரீன் கிரவுன் நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.
சிவப்பு எச்சரிக்கை
கவுகாத்தி, ஜூன் 19- கனமழையால் தத்த ளித்து வரும் அசாம் மாநி லத்தில் வியாழன் வரை அதிதீவிர மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடு கிறது. எனவே பாதுகாப்பு கருதி அசாம் மாநிலத்தின் மேற்கே தாழ்வாக உள்ள சிரங், பக்சா, பார்பெட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 33 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
3 இந்தியர்கள் படுகொலை
லண்டன், ஜூன் 19 - இங்கிலாந்தில் உள்ள கேம்பர் வெல்லில் உள்ள சவுத் தாம்டன் வே என்ற இடத்தில் வசித்து வந்தவர் அரவிந்த் சசிக்குமார் (38).கேரளாவை சேர்ந்த சசிக்குமார் கடந்த வெள்ளியன்று கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். போலீசார் மற்றும் மருத்து வக் குழுவினர் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சை அளித்தும் சம்பவ இடத்தி லேயே அரவிந்த் உயிரிழந் தார். இவரை கொன்றதாக சல்மான் சலீம்(25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இருக்கட்டும்; மணிப்பூருக்கு என்ன தீர்வு?
“வன்முறையின் பிடியில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தை பிரதமர் மோடி எட்டிக்கூடப் பார்க்க வில்லை. அங்கு அமைதியை நிலைநாட்டி வன்முறையை சுட்டு வீழ்த்தினால், பிரதமர் மோடி ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுவதை தாங்களும் நம்பு வோம்” என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார்.
உ.பி.யில் பிரிஜ் பூஷண் வாகனங்கள் மீது கல்வீச்சு!
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங், உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பாஜகவில் இருதரப்பாக இருந்தவர்கள், நிகழ்ச்சி மேடையில் செல்பி எடுக்கும் போது தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து உடைத்தும், கற்களை வீசியும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மோதலுக்கு இடையே, பிரிஜ் பூஷண் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட நிலையில், அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன.
ராமரையும், அனுமனையும் இந்தளவிற்கா அவமானப்படுத்துவது?
“ராமர், அனுமன் ஆகியோரின் முந்தைய படைப்புகள் கனிவானதாகவும் பக்தி நிறைந்ததாக வும் இருந்தன. வால்மீகி ராமாயணத்தில் காட்டப்பட்ட அவர்களது படைப்புகள், சக்தியும் பக்தியும் நிறைந்ததாக இருந்தன. ஆனால் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமரை போர்வீரனாகவும், அனு மனை கோபப் பறவையாகவும் சித்தரித்துள்ளனர். ராமரும், அனுமனும் கண்ணியமற்ற வார்த்தை களை பேச வைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அனுமான் கதாபாத்திரத்திற்கான வசனம் மிகவும் அடி மட்ட அளவில் உள்ளது. வலதுசாரி அமைப்பான பஜ்ரங்தள் பேசும் வார்த்தைகளை, அனுமன் மூலம் பேச வைத்துள்ளனர். இதனை நான் கண்டிக்கிறேன்” என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் பேசியுள்ளார்.
சாவர்க்கர், ஹெட்கேவாரின் சித்தாந்தம், இந்தியாவின் சித்தாந்தமல்ல!
“இந்திய மற்றும் கர்நாடக மாணவர்கள் கே.பி. ஹெட்கேவார் மற்றும் வி.டி. சாவர்க்கரின் சித் தாந்தத்தைப் பற்றி படிப்பதை விட, பி.ஆர். அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களைப் பற்றி படிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்பதால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தயவைப் பெறவே, “சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, அவர் எங்களுக்கு ஒரு முன்மாதிரி” என்று நிதின் கட்காரி கூறுகிறார் மற்றபடி, சாவர்க்கர் மற்றும் ஹெட்கேவாரின் சித்தாந்தம் இந்தியாவின் சித்தாந்தம் அல்ல என்பதை அவர் (நிதின் கட்காரி) அறிவார்” என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறியுள்ளார்.
‘பிடிஏ’ கூட்டணி, ‘என்டிஏ’வைத் தோற்கடிக்கும்: அகிலேஷ்
“2024 மக்களவைத் தேர்தலில் ‘பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மை யினர்’ ஆகியோரை உள்ளடக்கிய எனது பிடிஏ (Pichde, Dalit and Alpasankhyak - PDA) கூட்டணி பார்முலா, பாஜக தலைமையிலான என்டிஏ (National Democratic Alliance -NDA) கூட்டணியைத் தோற்கடிக்கும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். “உத்தரப்பிரதேசத்தில், 80-லும் தோற்கடி, பாஜக-வை அகற்று” என்பது தான் தனது ஒரே முழக்கம் என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார். பெரிய தேசிய கட்சிகள் (காங்கிரஸ்) எங்களை (சமாஜ்வாதி) ஆதரித்தால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதி களிலும் பாஜக தோற்கடிக்கப்படும்” என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்களையே இயக்க முடியாதவர் நாட்டை எப்படி வழிநடத்துவார்?
“நன்றாக இயங்கிய ரயில்வே துறையை அவர்கள் (பாஜகவினர்) அழித்தார்கள். இன்று ஏ.சி. கோச்சில் முன்பதிவு செய்தாலும் உட்காரவோ தூங்கவோ இருக்கை கிடைக்காது. பொதுப் பெட்டிகளை காட்டிலும் ஏ.சி. மற்றும் ஸ்லீப்பர் கோச்கள் மோசமானவை. அவர்களுக்கு அர சாங்கத்தை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. இது படிப்பறிவில்லாத அரசு. இது ஒவ்வொரு துறையையும் சீரழித்து வருகிறது. படித்தவர்கள் நாட்டை ஆட்சி செய்தால் பண மதிப்பு நீக்கம், விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். ரயில்களையே இயக்க முடியாதவர் நாட்டை எப்படி நடத்துவார்?” என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்நாள் ஒப்புக்கொண்ட அரிசியை மறுநாள் இல்லை என்கின்றனர்
“வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு தேவையான அரிசியை வழங்குமாறு இந்திய உணவுக் கழகத்திடம் கேட்டோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அடுத்த நாளே தங்களால் அரிசி வழங்க இயலாது என்று கூறி ஜூன் 12 அன்று கடிதம் எழுதுகின்றனர். முதலில் அரிசி இருப்ப தாக கூறிவிட்டு பிறகு இல்லை என்று கூறுவதை என்னவென்று புரிந்து கொள்வது? அவர்கள் அரிசி கொடுப்பதாக கூறியதால்தான் நாங்கள் ஒன்றிய அமைச்சரிடம் பேசவில்லை. இல்லை யென கூறியிருந்தால், நான் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசியிருப்பேன். அரிசி வழங்குவதில் பாஜகவினர் அரசியல் செய்யக் கூடாது. கர்நாடக பாஜக தலைவர்கள் ஒன்றிய அரசிடம் பேசி கர்நாட கத்திற்கு தேவையான அரிசியை ஒதுக்குமாறு சொல்ல வேண்டும்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டியில் கூறியுள்ளார்.
பாஜகவின் வரலாற்றை அழிக்கப் பார்க்கின்றனர்: சஞ்சய் ராவத்
“மற்ற பிரதமர்களின் பங்களிப்பு காட்டப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக, மற்ற பிரதமர்களின் பங்களிப்புகளை காட்சிப்படுத்தக்கூடிய ஒரு பகுதியை உருவாக்கலாம். ஆனால், அருங்காட்சியகத்தின் பெயரையே மாற்ற வேண்டிய அவசியமில்லை. நாட்டின் வரலாற்றில் ஒன்றிய அரசு குழப்பம் விளைவிக்கிறது. பண்டித நேருவின் பெயரை பிரதமர் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கலாம். பண்டிட் நேரு நமது முதல் பிரதமர் மற்றும் அவ ருக்கு பெரும் பங்களிப்பு இருந்தது. அவரின் பெயரை நீக்கியதன் மூலம் வரலாற்றை அழிக்கப் பார்க்கிறார்கள் அவ்வளவுதான்” என்று சிவசேனா (உ.பா.தா.) எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
மழையிலும் நடந்த 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு
சென்னை,ஜூன் 19- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாண வர்கள் உடனடியாக தேர்வு எழுதி இந்த கல்வியாண்டிலே உயர்கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு பள்ளிகளில் நேரடியாக படித்தவர்களும், தனித் தேர்வர்களும் விண்ணப்பிக்க அவகா சம் கொடுக்கப்பட்டது. அதன்படி 56 ஆயிரம் பேர் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வியடைந்த பாடங்களை எழுத விண்ணப்பித்தனர். அவர்களுக்கு திங்களன்று (ஜூன் 19) தேர்வு நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டது. தமிழ்நாடு முழுவதும் 194 மையங்க ளில் துணைத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவ தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் துணைத்தேர்வு திட்ட மிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டது. அதன்படி மழையிலும் இத்தேர்வை மாணவர்கள் எழுதினர்.
திறந்த வெளியில் நெல் மூட்டைகள்: மழையில் நனைந்து வீணாக வாய்ப்பு
ஓசூர்,ஜூன் 19- ஓசூரில், 6,900 டன் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்பட் டுள்ளதால், பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக் கோட்டை, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி என ஐந்து இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்கள் உள்ளன. இங்கிருந்து ரேசன் கடைகள், சத்துணவுக்காக பள்ளி மற்றும் அங்கன் வாடி மையங்களுக்கு அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல், சரக்கு ரயிலில் எடுத்து வரப்படுகிறது. இதன்படி கடந்த மார்ச் மாதம், 16,500 டன் நெல் ஓசூர் வந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இடம் இல்லை எனக்கூறி, ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதான பின்புறம், திறந்தவெளியில் மூட்டைகளை அடுக்கி, தார்ப்பாயால் மூடி வைத்தனர். அரிசி ஆலைகளுக்கு, 9,600 டன் அனுப்பி வைக்கப்பட்ட நிலை யில், 6,900 டன் நெல் மூட்டை தற்போது இங்குள்ளது. மார்ச் மாதம் நெல் லோடு வந்தவுடன், ‘ஷெட்’ அமைக்க கேட்ட போது மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் எந்த பாதுகாப்புமின்றி மழை, வெயிலில், நெல் மூட்டை பாழாகி வருவதாக, விவசாயி கள் வேதனை தெரிவித்துள்ளனர்.