states

தருமபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதா?

மயிலாடுதுறை, ஏப்.17- மயிலாடுதுறை தருமபுரத்தில் தருமபுர ஆதீன பல்பொருள் அருங்  காட்சியகம் மற்றும் ஞானரத யாத்தி ரையைத் தொடங்கி வைக்க ஏப்.19 அன்று வரும் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் விடுதலை சிறுத்தை கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, திராவிடர் கழகம், மக்கள் அதி காரம், தந்தை பெரியார் திராவிடர் கழ கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமி ழர் உரிமை இயக்கம், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், தமுமுக தமிழக  நிலம் - நீர் பாதுகாப்பு இயக்கம், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), மக் கள் விடுதலை, ஆதித்தமிழர் பேரவை ஆகிய 16 அமைப்புகள் கொண்ட குழு எதிர்ப்பு மனு அளித்துள்ளது. இது தொடர்பாக 16 அமைப்பு களை சேர்ந்த பொறுப்பாளர்கள் தருமபுர ஆதீன அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 420 ஆண்டுகால வரலாறு கொண்டது. சைவம், சைவ சித்  தாந்தம், தமிழ் மொழி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் குறிப்பி டத்தக்க பங்காற்றியுள்ளது. இன்றை யச் சூழலில் தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழர் அடையாளம் உள்  ளிட்டவற்றை ஒழித்துக்கட்டி, “இப்  போதைக்கு இந்தியும், எதிர்காலத்  தில் சமஸ்கிருதமும்” என்ற வேலைத் திட்டத்தோடு, இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழித்துக்கட்டும் நோக் கத்தோடு செயல்பட்டு வருகின்றன ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்பு கள். இவை தமிழ் மடங்களை தங்க ளுடைய செல்வாக்கு வளையத்துக் குள் கொண்டு வரும் வேலையில் இறங்கியுள்ளன. இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன. தமிழ்  நாட்டிற்கு ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ள ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ். காரர். ஆளுநர் மாளிகை என்பது இப்போது இந்துத்துவா செயல்பாடு களுக்கான தலைமையிடமாக கிட்டத்  தட்ட மாறிவிட்டது.  தமிழ்மொழி - தமிழர் அடையாளம் - தமிழ் இனம் - தமிழ்ப் பண்பாடு  ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிட்டு, “ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே பண்பாடு” என்ற நோக்கில் இன்றைய பாஜக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு உணர்வுக்கு எதிராக செயல்படுவதற்காகவே ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

ஓர் ஆளுநருக்குத் தேவையான மாண்புகள் காரணமாக நியமனம் பெறவில்லை; அவர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதாலேயே, தமிழ்நாடு அரசை செயல்பட விடாமல் முடக்க வேண்டும் என்பதற்காகவே ஆளு நராக நியமிக்கப்பட்டவர். தமிழக  சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும் பான்மை உறுப்பினர்களால் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கும் தீர்மானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, தொடர்ந்து கிடப்பில் போட்டு வருகிறார். இப்போக்கு தமிழ்நாட் டின் இறையாண்மைக்கும், ஜன நாயகத்துக்கும் எதிரானது.  மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக சட்டமன்றம் நிறை வேற்றிய மசோதா இன்றுவரை கிடப்பில் கிடக்கிறது. ஏழு தமிழர் விடு தலை குறித்து தமிழ்நாடு அமைச்ச ரவைத் தீர்மானமும் நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கிறது. இதுபோல கிட்டத்தட்ட 18 மசோதாக்களும், தீர்மா னங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் நிர்வாகத்தை முடக்கு வதையே நோக்கமாகக் கொண் டுள்ள ஒரு ஆளுநரை முதன்முதலாக இப்போதுதான் தமிழகம் சந்திக்கி றது.  சைவம் தனித்துவமானது என்று கடந்த காலத்தில் பேசி வந்த தமிழ் ஆதீனங்கள், இப்போது இந்து மதத்  துக்குள் சைவத்தை அடைக்கலமாக அனுமதித்து, இந்து மதம் என்ற பெயரில் சைவத்தை வைதீகம் மேலா ண்மை செய்வதை ஏற்கும் நிலைக்கு மாறிவருவது சைவத்தின் தனித்து வம் விரைவில் அழிக்கப்படும் என்ப தற்கான அறிகுறி. 

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீன பல்பொருள் அருங்  காட்சியகம் மற்றும் ஞானரத யாத்தி ரையைத் தொடங்கி வைக்க 19.4.2022 (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் ஆர்.என்.ரவி தருமை ஆதீனத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இது மிக வும் கவலை தரக்கூடியது.  தமிழையும், தமிழ்ப் பண்பாட்டை யும், தமிழர் நலனையும் பாதுகாக்க  வேண்டிய பழமை வாய்ந்த தருமை யாதீனம், இந்தியையும் சமஸ்கிரு தத்தையும் உயர்த்திப் பிடிக்கிற, இந்தி யத் துணைக் கண்டத்தின் அனைத்து மொழியினங்களின் அடையாளங்க ளையும் ஒழித்துக் கட்டிவிட்டு, ஒற்றை  அடையாளத்தை நிறுவ விரும்புகிற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை தங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. எனவே ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோருகிறோம். இந்நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவியை வைத்து தருமையாதீனம் நடத்த வேண்டாம் என்று வேண்டு கோள் விடுக்கிறோம்.  பல்வேறு அமைப்புகளும் உணர்வாளர்களும் முன்வைக்கக் கூடிய இவ்வேண்டுகோளை சீர்  வளர் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் குருமகாசன்னி தானம் ஏற்று, ஆர்.என். ரவியின் வரு கையை மறுத்து முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர். கடுமையான எதிர்ப்பையும் மீறி ஆளுநரை அழைத்து ஆதீனத்தீல் நிகழ்ச்சி நடத்தப்பெற்றால் கடும் போராட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.