சென்னை, மார்ச் 30- சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன. இந்த நடை முறை வருகிற 1 ஆம் தேதி முதல் நடை முறைக்கு வருகிறது. சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில், ஜோலார்பேட்டை- சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில், நிலம்பூர் சாலை- கோட்டயம் விரைவு ரயில், கோட்டயம்- நிலம்பூர் சாலை விரைவு ரயில், புனலூர்- குருவாயூர் விரைவு ரயில், திருச்சி சந்திப்பு- பாலக்காடு டவுன் விரைவு ரயில், பாலக்காடு டவுன்-திருச்சி சந்திப்பு விரைவு ரெயில், நாகர்கோவில்-கோட்டயம் விரைவு ரயில் உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.முன்பதிவு பெட்டிகள் தற்போது முன்பதிவில்லாத பெட்டிகளாக மாறுவதால் இதில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் முழு பணத்தையும் திரும்ப பெறலாம்.