கடந்த ஜூலை 31 அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் தீவிர இந்துத்துவா அமைப் பான பஜ்ரங் தள் அரங்கேற்றிய வன்முறை யில், மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகள் மணிப்பூர் போல வன்முறை பூமியாக மாறியது. இந்த வன்முறை யில் 6 பேர் உயிரிழந்த நிலை யில், பலர் படுகாயமடைந்த னர். இஸ்லாமியர்களின் வீடு, கடைகளை குறிவைத்து இந்துத்துவா குண்டர்கள் அடித்து நொறுக்கினர். ஹரியானாவில் கலவரத்தை கட்டுப்படுத்து கிறோம் என்ற பெயரில் ஆளும் பாஜக அரசு தன் பங்கிற்கு முஸ்லிம் வீடுகள், கடைகள், உண வகங்களை புல்டோசர் மூலம் தேடித் தேடி அழித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் புல்டோசர் நட வடிக்கை நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஹரியானா வன்முறையில் தொடர்பு இருப்பதாக பெரோஸ்பூர் ஜிகிரா தொகுதி எம்எல்ஏ மம்மன் கானை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனால் மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்ற மான சூழல் ஏற்பட்டுள்ளது. இணைய சேவை துண் டிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலை யில், செவ்வாயன்று மம்மன் கான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதையொட்டி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மம்மன் கானுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.