மும்பை, ஜூன் 13 - ஜூன் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து ரூ. 14 ஆயிரம் கோடி அளவிற்கான அந்நிய நேரடி முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதன்மூலம் நடப்பாண்டின் 6 மாதங் களுக்கு உள்ளாக மட்டும் வெளியேறிய ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, விநியோக நெருக்கடி ஆகிய காரணிகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வருவதாக கூறப்படு கிறது. கடந்த 2021 அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வெளியேறுவது தொடர்ச்சி யாக நிகழ்ந்து வருகிறது. 2022-ஆம் ஆண்டிலும் இது தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், பணவீக்கம் போன்ற காரணிகளால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் ஸ்திரமற்ற நிலையில் உள்ளன. இது இந்தியப் பங்குச் சந்தையிலும் சரிவை ஏற்படுத்தி வருகிறது. பங்குச் சந்தைகள் நிலைத் தன்மை அடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்றும் அதுவரையில் இந்தியாவில் அந்நிய முதலீடு வெளியேற்றம் தொடரும் என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.