- மின் இணைப்பு எண் ணை ஆதாருடன் இணைப் பதினால் வீடுகளுக்கு தற் பொழுது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நவ.28-ஆம் தேதி முதல் டிச.31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்ப டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறி வித்துள்ளார்.
- அரசியலமைப்பில் நம்பிக்கையில்லா பாஜக அரசியலமைப்பு தினம் கொண்டாடுகிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
- சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சைக்காக ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு மீண்டும் சிங்கப்பூர் செல்கிறார்.
- குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தும் ரூ.13.5 கோடி மதுபானம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 24,170 பேர் கைது செய்யப்பட்டு ள்ளதாக தேர்தல் அதிகாரி கள் தகவல் தெரிவித்துள் ளனர்.
- சமூக சேவை என்ற போர் வையின் கீழ் வெறுப்புப் பிரச்சாரத்தைத் திணி க்கும் ஆர்எஸ்எஸ் அமைப் பின் ஆணைகளுக்கு ஒன்றிய பாஜக அரசா ங்கம் தன்னையும், தன்னு டைய அமைப்புகளையும் முற்றிலுமாக சரணடைந் துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
- உலக அமைதிக்காக வடகொரியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். அந்த சமயத்தில்தான் இதை ஜி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார். மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக கிம் ஜோங் உன் சீனாவிற்கு சென்றுள்ளார்.
- சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு ராணுவ முகாம் அமெரிக்க ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து முகாமை நோக்கி பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. ஏற்கனவே அமெரிக்க முகாம்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். சிரியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கவே அமெரிக்க ராணுவ முகாம் அங்கு அமைக்கப்பட்டுள்ளன என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
- 2023 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் செக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 21 வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களில் ஒன்பது வேட்பாளர்கள் மட்டுமே விதிகளின்படி தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் மற்றும் நேட்டோ ராணுவக் குழுவின் முன்னாள் தலைவர் பாவல் ஆகிய இருவருக்குமிடையில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.