நாட்டில் 111 மருந்துகள் தரமற்றவை சிடிஎஸ்சிஓ அறிவிப்பு
நாட்டில் பயன்பாட்டில் உள்ள 111 மருந்துகள் தரமற்றவை என ஒன்றிய மருந்து தரக் கட்டுப் பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிடிஎஸ்சிஓ வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது,”கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வ கங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்து களும் தரமற்றவையாக உள்ளன. கடந்த நவம்பரில் இரண்டு மருந்து கள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பீகார் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காசியா பாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்ட றியப்பட்டது. இவ்வகை மருந்துகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப் படாத உற்பத்தியாளர்களால் மற்ற நிறுவ னங்களின் ‘பிராண்ட்’ பெயர்களைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப் படுகின்றன” என அதில் கூறப் பட்டுள்ளது.
பூர்வாஞ்சலிகளின் வாக்குகளை நீக்க பாஜக முயற்சி ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றம்சாட்டு
70 தொகுதிகளை கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கு அடுத் தாண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள பாஜக பல்வேறு சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி வலுவாக 45க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர்க ளை நீக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை ஆதாரத்துடன் ஆம் ஆத்மி கட்சி 2 வாரத்திற்கு முன்பு போட்டுடைத்தது. இந்நிலையில், பூர்வாஞ்சல் பகுதி யைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை நீக்க பாஜக முயற்சி செய்வதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சஞ்சய் சிங் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“புதுதில்லி சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது மனைவி அனிதா சிங்கின் பெயரை நீக்க பாஜக முயற்சித்து வரு கிறது. அனிதா சிங் வாக்கு மட்டுமின்றி தில்லியில் குடியேறிய பூர்வாஞ்சல் மக்களின் பெயர்களை நீக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது” என குற்றம்சாட்டியுள்ளார். பூர்வாஞ்சலிகள்? சஞ்சய் சிங் மற்றும் அவரது மனைவி அனிதா சிங் கிழக்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பூர்வாஞ்சல் என்பது கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரின் ஒரு பகுதியைக் குறிக்கும் பெயர். இப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தில்லி யில் குடியேறி பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்து.
பொங்கல் தொகுப்பு ஜன.9 முதல் டோக்கன்
சென்னை, டிச.29- 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், அனை த்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தி னருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங் கல் பண்டிகைக்கு முன்பு பரிசு தொகுப்பை வழங்கும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்கவும், இரண்டாம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும் பிற்பகலில் 200 பேருக்கும் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60
சென்னை, டிச.29- பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் திங்களன்று (டிச. 30) இரவு 9.58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா வில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட் ஏவப்படுவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் ஞாயிற் றுக்கிழமை (டிச.29) இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. ஸ்பேடெக்ஸ் திட்டத்துக் காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக் கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவி கள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ முன்னதாக தெரி வித்தது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை, டிச.29- ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியில் சேரும் வகை யில் படிப்பை முடித்த இளைஞர்கள் தனியார் பயிற்சி நிறு வனங்கள் மூலம் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகை யில் தனியார் பயிற்சி முகாமில் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து பயிற்சி பெற முடியாதவர்களுக்கு தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப் பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கவுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர் களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதி யும், பயிற்சிக்கான செலவு தொகை தாட்கோ நிறுவனம் வழங்கும். இத்திட்டத்தில் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
செயற்கை செறிவூட்டும் கிணறுகள்: விவசாயிகளின் எதிர்பார்ப்பு
தமிழகத்தின் நீர்த் தேவையை இரண்டு
முக்கிய பருவமழைகள் பூர்த்தி செய்கின்றன:
H தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை)
H வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை)
தமிழகத்தின் வருடாந்திர சராசரி மழைப்பொழிவு விவரம்:
H பனிக்கால மழை: 27.0 மி.மீ
H கோடைக்கால மழை: 120.2 மி.மீ
H தென்மேற்குப் பருவமழை: 340.4 மி.மீ
H வடகிழக்குப் பருவமழை: 479.2 மி.மீ
மொத்த சராசரி: 966.8 மி.மீ
தற்போதைய சவால்கள்
H தென்மேற்கு பருவமழை 76 நாட்க
ளுக்குப் பதிலாக 24-28 நாட்களில் முடி
வடைகிறது.
Hவடகிழக்கு பருவமழை 57 நாட்களுக்குப் பதிலாக 13-18 நாட்களில் நிறைவடைகிறது
H குறுகிய காலத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்
ளது.
நிலத்தடி நீர் நிலை
H தமிழகத்தில் 12,618 ஊராட்சிகளில் முன்பு 88,326 கிணறுகள் பயன்பாட்டில் இருந்தன
H 2023 மார்ச் மாத ஆய்வின்படி தமிழக கிணறுகளில்:
H 358 பகுதிகள் - மிகவும் அபாயகரமான நிலை
H 105 பகுதிகள் - அபாயகரமான நிலை
H212 பகுதிகள் - அபாயகரமான நிலைக்கு மாறும் அபாயம்
H36 இடங்களில் - உப்புத்தன்மை காரணமாக பயன்படுத்த முடியாத நிலை
அரசின் முயற்சிகள்
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரூ.83.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்து; காஞ்சி
புரம், ஈரோடு, தேனி, திருச்சி, கடலூர், விழுப்
புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செயற்கை செறிவூட்டும் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகள்
1. அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்க
ளில் செயற்கை செறிவூட்டும் கிணறுகள் அமைக்க வேண்டும்.
2. போர்க்கால அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
3. நிதி நிலையை காரணம் காட்டி திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாது.
எதிர்கால நீர்த் தேவையை பூர்த்தி செய்ய
மழைநீர் சேமிப்பு மற்றும் செயற்கை செறி
வூட்டும் கிணறுகள் அமைப்பது அவசிய
மாகிறது.
-ஐ.வி.நாகராஜன்
கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சனியன்று, நாமக்கல்லில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முகமதுஅலி தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி, மாநில நிர்வாகிகள் என்.செல்லத்துரை, பி.ராமநாதன், வெண்மணி சந்திரன், தீர்த்தகிரி, நாமக்கல் மாவட்டத் தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45ம், எருமைப்பாலுக்கு ரூ.54ம் வழங்க வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ஊக்கத்தொகை யை உடனடியாக வழங்க வேண்டும். ஆவின் கலப்புத்தீவனம் 50 சதவிகிதம் மானிய விலையில் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின்படி, ஆரம்ப சங்கங்களில் பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக தரத்தையும். அளவையும் குறித்து கொடுக்க வேண்டும். தற்போது மாநிலம் முழுவதும் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது. எனவே, உடனடியாக அம்மை தடுப்பு நோய் ஊசி போடுவதற்கும், இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தைப்பொங்கலுக்கு முன்பாக மாவட்ட ஒன்றியங்க ளில் வரவு செலவு கணக்கை முடித்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் வரவு செலவு கணக்கு முடித்து போனஸ் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப் பட்ட பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு இல்லாத நிலையில், தனி அலுவலர்கள் கையூட்டு பெற்று காசோலைகளில் கையெழுத்து போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.6, 7 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சங்கங்கள், ஆவின் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கறவை மாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.