ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி
காபூல். அக்,11- அக்டோபர் 7 அன்று ஆப் கானிஸ்தானின் ஹெராத் நக ரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த னர். 12 கிராமங்கள் முற்றி லும் சிதைந்து போய்விட்டன. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை மீண்டும் ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத் தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் நகரத்தை சுற்றி பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு தரை மட்டமாகி விட்டன, குறிப்பாக சஹாக் கிராமத்தில் 700 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகியுள்ளது என்றும் இது நகரத்திற்கு பெரும் இழப்பு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் தேர்தல் திடீர் மாற்றம்
ஜெய்ப்பூர், அக்., 11- திடீரென ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 23க்குப் பதிலாக 25 அன்று நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23 அன்று முகூர்த்த தின மாக உள்ளதால் அன்று ஏராளமான திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இத னால் பொதுமக்கள் வாக்க ளிப்பதைத் தவிர்க்கும் சூழல் உருவாகும் என்பதால் தேர் தல் தேதி மாற்றப்பட்டுள் ளது; எனினும் வாக்கு எண்ணிக்கை தேதியில் (டிச.,3) எந்த மாற்றமு மில்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நைஜரில் இருந்து வெளியேற்றப்படும் பிரான்ஸ் ராணுவம்
நியாமே, அக்.11- பிரான்ஸ் ராணுவத் தளங்களில் இருந்து முதல் கட்டமாக 1500 வீரர்களை செவ்வாய்க்கிழமை வெளியேற்றியது நைஜர். ஆப்பிரிக்கா நாடான நைஜரில் பிரான்ஸ் காலனியாதிக்கத்துக்கு எதி ராக ராணுவக் கிளர்ச்சி நடைபெற்று கடந்த ஜூலை மாதம் ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது.அதன் பிறகு பிரான்ஸ் ராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ராணுவத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அறி வித்திருந்தது. அதன் அடிப்படையில் 1500 பிரான்ஸ் ராணுவ வீரர்களை வெளி யேற்றுகிறது. இவர்கள் சாலை மார்க்கமாக மத்திய ஆப்பிரிக்கா நாடான சாட் செல்கின்றனர்.மீத முள்ள பிரான்ஸ் ராணுவ வீரர்கள் ஒப்பந்தத்தில் போடப்பட்ட கால அட்ட வணையின் படி வெளியேறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
செவிலியர் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை, அக். 11 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: செவிலியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 10.10.2023 அன்று போராட்டம் அறிவித்திருந்தனர். அதன் படி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில், ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தியபோது, பெண் செவிலியர் களிடம் ஆண் காவலர்கள் மிக மோச மாக நடந்து கொண்டுள்ளனர். தலைமுடியைப் பிடித்து இழுப்பது, உடைகளைக் கிழித்து தரதரவென்று இழுத்துச் சென்றது, போன்ற அத்து மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். கைது நட வடிக்கை என்ற பெயரில் போராடிய செவிலியர்கள் பல இடங்களில் தனித்தனியாகவும் பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் இத்தகைய மோசமான அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. காலை 11 மணிக்கு பேச்சு வார்த்தை என்று கூறிவிட்டு, திடீரென செவிலியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. செவிலியர்கள் மீது, இவ்வாறான கடுமையான அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது, உட னடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட செவிலியர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து, வெளியிட்ட பல்வேறு வீடி யோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் ஆணையம், செவி லியர்களிடம் விசாரித்து, காவல்துறை அதிகாரிகள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க, தமிழக அரசிற்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
ரூ.468 கோடி போதைப் பொருட்கள் அழிப்பு
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில், வெளிநாடு மற்றும் உள்நாட்டின் பல்வேறு பகுதி களில் கடத்தி கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அவ்வப்போது எரித்து அழிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டில் கைப்பற்றப்பட்ட சுமார் 216.69 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் புதனன்று அழித்த னர். இதில் ரூ.272 கோடி மதிப்புள்ள மெபாட் ரோன், ரூ.195 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெரா யின், சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் சிகரெட் பாக்கெட்டுகள், சிறிதளவு கஞ்சா பாக்கெட்டுகள் ஆகியவை அழிக்கப்பட்டது.
அரிசி ஆலைகளையும் விட்டுவைக்காத அமலாக்கத்துறை
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி வேலை வாய்ப்பு ஊழல் தொடர் பாக சிபிஐ விசாரணை நடத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 4 ஆசிரியர்களை சாட்சிகளாகக் குறிப்பிட்டது. இந்நிலை யில், இந்த விவகாரம் தொடர்பாக புத னன்று மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் சாந்திபூர், துபுலியா, ரனா காட் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகிய 4 இடங்களில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரி கள் புதனன்று சோதனை நடத்தினர். வேலை மோசடி மூலம் பெறப்பட்ட தொகை அரிசி ஆலைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதை நிரூ பிக்கும் ஆவணங்கள் தங்களிடம் உள் ளது என்றும், அதனால் அரிசி ஆலை களில் சோதனைகள் மேற்கொண்டதாக வும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
உணர்வுப்பூர்வமான முழு அடைப்பு
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பங்கேற்க அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், வணி கர் சங்கத் தலைவர்களை சென்னையில் சந்தித்து ஆதரவு கோரிய பின் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் தஞ்சாவூரில் அறி விக்கப்பட்டது. இப்போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, தி.க, மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட அனை த்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் உணர்வுப் பூர்வமாக பங்கேற்று வெற்றி பெறச் செய்துள்ள னர். பாரம்பரியம் மிக்க வணிகர் சங்கங்களு டன், வணிகர் சங்க பேரமைப்பு, வணிகர் நலச் சங்கம் மற்றும் அனைத்து வணிகர்களும் முழுமை யாக கடையடைப்பு செய்ததுடன் போராட்டத்தி லும் பங்கேற்றனர். வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் இதன் இயக்கங்களை நிறுத்தி பங்கேற்றனர். தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் சங்கம் என போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர். பொது மக்கள் பயணங்களை தவிர்த்து ஆதர வளித்துள்ளனர். அனைத்து இடங்களிலும் பல்லாயிரக்கண க்கானோர் பேரணியாகச் சென்று ஒன்றிய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டங்களையும், சாலை மறியல் போராட்டங்களையும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கோரிக்கை முழக்கமிட்டு நாள் முழுவதும் நடத்தியது என்பது காவிரியின் நமது உரிமையை நிலை நாட்டுவதாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததன் எதிரொலி யாகத்தான் கர்நாடகம் புதனன்று 8000 கன அடி தண்ணீர் திறந்துவிடும் நிலையை உருவாக்கி இருக்கிறது. ஆகவே தண்ணீரை பெறுவோம் என்கிற நம்பிக்கையுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம், தன் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: முதல்வர்
சென்னை, அக்.11- தமிழ்நாட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தா லும் அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று முதல மைச்சர் அறிவித்தார். திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம் குறித்து அதிமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர் இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,“திருச்சி மாவட்டம் முக்கொம்பில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக, 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அன்றைய தினமே அவர்கள் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் அடைக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் புகார் அளித்த உடன் உடனடியாக, மாவட்ட கண் காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் துறைரீதியாகக் கடு மையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
நாகையிலிருந்து கீழையூருக்கு நகரப்பேருந்து
சென்னை, அக்.11- தமிழ்நாடு சட்டப்பேர வையில் நடந்த கேள்வி நேரத்தின் போது மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி, கீழ்வேளூர் தொகுதி, நாகப்பட்டினத்திலிருந்து கீழையூர் வரை தற்போது நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை செல்வோர் மிகுந்த சிரமப்படுவதை கருத்தில் கொண்டு நகரப் பேருந்து கூடுதலாக இயக்க அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,“ஏற்கெனவே உறுப்பினர் கேட்ட பல்வேறு வழித்தடங்களில் கூடுதலாக வும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. வழித்தடமும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும், தற்போது கேட்டுள்ள வழித் தடத்தில் பேருந்து இயக்கு வது குறித்து ஆய்வு செய்யப் படும். பல்வேறு வழித்தடங் களில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமானது மயிலாடுதுறை
சென்னை,அக்.11- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்ப தற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் புத னன்று (அக்.11) நிறைவேறி யது. தமிழ்நாடு சட்டப்பேர வையில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்ட மசோதாவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்க்கப் பட்டது, ஷெல் வாயு, ஹைட்ரோ கார்பன் ஆய்வு கள், விவசாயம் அல்லாத பணிகளுக்கு துளையிடுதல் போன்ற பணிகளுக்கு இனி அனுமதி அளிக்கப்படாது. அதேபோல், விவசாயம் அல்லாத தொழில் சார்ந்த புதிய திட்டங்களுக்கும் மயி லாடுதுறையில் இனி அனுமதி வழங்கப்படாது என்று அதில் கூறப்பட்டுள் ளது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 13 சட்ட மசோ தாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
கொடநாடு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: முதல்வர்
சென்னை, அக்.11- கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படு வார்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொடநாடு பங்களாவில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வந்த மின்சாரம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் இயங்கவில்லை. இந்த நிலையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடை பெற்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாட்களில் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்துவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னமும் குற்றவாளிகளை கண்டு பிடிக்காதது ஏன்? என்று சட்டமன்ற உறுப்பினர் வைத்தி லிங்கம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,“ கொடநாடு வழக்கு சிபிசிஐடி யின் கீழ் இருப்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டோம். கொடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து தற்போதைய நிலவரம் குறித்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எனவே இந்த வழக்கில் யார் யார் தவறு செய்து இருக் கிறார்கள் என்பது குறித்து விரைவில் தெரியவரும். இந்த வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்”என்றார்.