states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ம.பி.யில் சிமெண்ட் லாரி டயர் வெடித்து விபத்து: 14 பேர் பலி!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மகா கும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே வெள்ளியன்று இரவு 9 மணியளவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாக  அதிவேகமாக வந்துகொண்டிருந்த சிமெண்ட் லாரியின் டயர் திடீரென வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது  அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்த நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 10 கிலோ இலவச அரிசி

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்ற புதிய வாக்குறுதியை அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார். 

எம்எல்சி பதவியை ராஜினாமா செய்த உபேந்திர குஷ்வாஹா!

பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைத்தார். முதல்வர்  பதவியையும் அவர் தக்கவைத்துக் கொண்டார். ஆனால், இந்த புதிய கூட்டணிக்கு கட்சியின் மூத்த  தலைவர் உபேந்திர குஷ்வாஹா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் என்ற பெயரில் தனிக்கட்சியும் துவங்கி னார். இதனிடையே, முன்பு வழங்கப்பட்டிருந்த எம்எல்சி பதவியையும் உபேந்திர குஷ்வாஹா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

அவுரங்காபாத் பெயரை மாற்றிய மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகரின் பெயரை சத்ரபதி சாம்பாஜி நகர் என்றும், உஸ்மான்பாத் நகரின் பெயர் தர்ஷிவா நகர் என்றும் மாற்றப்படுவதாக பாஜக தலைவரும், மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு ஏற்கெனவே நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானத்திற்கு, ஒன்றிய  அரசின் உள்துறை அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் செழிப்பாக வாழ்வதாக ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

“பாகிஸ்தான் விரோதத்தின் அடிப்படையில் உருவானது. ‘நாம் இந்தியாவுடன் இருக்க முடியாது’ என்ற ஜின்னா மற்றும் இக்பால் ஆகியோரின் கருத்துதான் பாகிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது. இங்கு இந்துக்களுடன் இணைந்து வாழ முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள், அது தவறான கொள்கை. ஆனால், பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை வெகு வாக குறைந்துள்ள நிலையில், முஸ்லிம் மக்கள் இங்கு (இந்தியாவில்) நன்றாக வாழ்கிறார்கள், செழித்து வருகிறார்கள்” என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் பேசி யுள்ளார்.

எனக்கு பதவிகள் கிடைக்க ஆர்எஸ்எஸ்தான் காரணம்: எடியூரப்பா

“நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்எஸ்எஸ் தான் காரணம். நான் அங்கு பயிற்சி  பெற்றதால்தான் எனக்கு பல பதவிகள் கிடைத்தன. நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். சிகாரிப்புரா தொகுதி மக்களுக்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நலனுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன்” என்று குதிரை பேரத்திற்கு பெயர்போன பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா அறிவித்துள்ளார்.

ஆதார் எண்ணை இணைக்காதோர்  2.95 லட்சம் பேர்

 சென்னை,பிப்.25- தமிழ்நாடு மின்சார வாரியத்தி லுள்ள 2 கோடியே 67 லட்சம் மின்  இணைப்பு எண்களை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15 முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தி லிருந்து மின் அலுவலகங்களில் நேரடி யாக இணைக்கும் பணி நடந்தது. 100 விழுக்காடு இணைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கோடு நடைபெற்று வரும் இந்த பணி வருகிற 28 ஆம் தேதியுடன் நிறை வடைகிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில்  98.05 விழுக்காட்டினர் ஆதாருடன் இணைத்துள்ளனர். இன்னும் 1.5 விழுக்காட்டினர் மட்டுமே இணைக்க வேண்டும். அதாவது 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. 3 நாட்களில் இந்த பணி நிறைவடையும். அதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக் கப்படாது என மின் வாரிய உயர் அதி காரி ஒருவர் தெரிவித்தார். மின்  இணைப்பை ஆதாருடன் இணைக்கா மல் இருந்தாலும் மின் கட்டணம் செலுத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று அவர் கூறினார்.

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை,பிப்.25- தமிழ்நாடு முன்னாள் முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார்  பழனியம்மாள் (95)வெள்ளியன்று (பிப்.24) இரவு பெரியகுளத்தில் காலமானார் . அவரது மறைவுக்கு இரங்கல்  தெரிவித்து அறிக்கை வெளியிட்டி ருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,“ ஓ.பன்னீர் செல்வம் உட்பட  ஐந்து மகன்களையும், நான்கு மகள்களையும் பெற்று வளர்த்த  பெருமைக்குரிய தாயார். குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த அவரது மறைவு பெரும் வேதனையளிக்கிறது. அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்,  அன்னையைப் பிரிந்து  வாடும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. என்று தெரிவித்திருக்கிறார்.  இதேபோல், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பட்டாளி மக்கள்  கட்சி நிறுவன மருத்துவர் ச.இராமதாசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.  காதர் மொகிதீன், மனிதநேய மக்கள்  கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

தங்கம் விலை குறைந்தது

சென்னை,பிப்.25- தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற  இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலை யில் தங்கம் விலை இந்த வாரம்  குறைந்து வருகிறது. வெள்ளிக் கிழமை (பிப்.24)  சவரன் ரூ.41,880க்கு  விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,235-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை யன்று(பிப்.25) தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு  சவரன் தங்கம் ரூ.41,680 க்கு விற்கப்படு கிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,210-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.70-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.70,000க்கு விற்பனையாகிறது.

சென்னை - மைசூரு வந்தே பாரத்  ரயில்   திருவள்ளூரில்   நிற்காது

சென்னை,பிப்.25- நாட்டின் முக்கிய ரயில் நிலை யங்களை இணைக்கும் வகை யில், வந்தே பாரத் என்ற பெயரில்  அதிநவீன விரைவு சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. அதன்படி, நாட்டின் 5-வது  வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே கடந்த ஆண்டு நவ.11 ஆம் தேதி  தொடங்கப்பட்டது. இந்த ரயில் சென்னை சென்ட்ர லிலிருந்து அதிகாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.20-க்கு மைசூரு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரயில்மைசூருவிலிருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்பட்டு இரவு  7.30 மணிக்கு சென்னை சென்ட் ரலை வந்தடைகிறது. இந்த ரயி லுக்கு நாளுக்கு நாள் பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரயில் பயணி களின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில்  நின்று செல்ல சென்னை கோட்ட  அதிகாரிகள் ரயில்வே வாரியத் துக்கு பரிந்துரை செய்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த ரயில் திருவள்ளூரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளதாகவும் சில நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகளுக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

விழுப்புரம், பிப்.25- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே குண்டலப்புலி யூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களை சித்ரவதை செய்தது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்த புகாரில் ஆசிரம நிர்வாகி  ஜூபின் பேபி உட்பட 8 பேர்மீது  காவல்துறையினர் 13 பிரிவின் கீழ்  வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவலர்கள், ஆசிரமத்தின் நிர்வாகி களை காவலில் எடுத்து விசாரிப் பதற்கு விழுப்புரம் தலைமை குற்றவி யல் நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த  மனு மீது விசாரணை சனிக்கிழமை (பிப்.25) நீதிபதி புஷ்பராணி முன்னி லையில் நடைபெற்றது. அப்போது ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை நீதிபதி முன்னிலை யில் ஆஜர்படுத்தினர்.  பிறகு, சிபிசிஐடி மனுவை  விசாரணை செய்த நீதிபதி புஷ்ப ராணி சனிக்கிழமை 12 மணி முதல் வருகின்ற பிப்ரவரி 28 ஆம்  தேதி 10 மணி வரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை செய்வ தற்கு அனுமதித்து உத்தரவிட்டார்.  மேலும் அவர்களை வருகின்ற 28 ஆம் தேதி 10 மணிக்கு  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் சிபிசிஐடி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

எரிபொருள் நெருக்கடி தொடரும்

வல்லுநர்கள் எச்சரிக்கை

பிரஸ்சல்ஸ், பிப்.25- ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி, வரும் நாட்க ளிலும் தொடரும் என்று வல்லுநர்கள் எச்ச ரித்திருக்கிறார்கள். இது குறித்து உலகப் பொருளாதாரக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வின்படி, கடந்த ஓராண்டில் வீடுகளுக்கான எரிபொருட்களின் விலை கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி உள்ளன. உக்ரைன் விவகாரம் தொடங்கி யதே இதற்குக் காரணமாகும். இந்தப் பிரச்ச னைக்கு இப்போதைக்குத் தீர்வு கிடைக்காத நிலையில் நெருக்கடியும் தொட ரும் என்று ஆய்வு கூறுகிறது. இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இதுவரையில் எந்த வித முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லை. பிப்ரவரி 24 ஆம் தேதியோடு உக்ரைன் விவகாரம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையுயர்வு பெரும்பாலான மக்களை வாட்டி எடுத்துவிட்டது. மாற்று எரிபொருளை நோக்கிச் செல்வதற்கும் இது வேகத்தடையைப் போட்டிருக்கிறது. எரிபொருள் பாதுகாப்பின்மையால் உலக அளவில் வறுமையையும் அதிகரிக்கச் செய்து விட்டது. சில ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி மற்றும் இத்தாலி, ரஷ்யாவிட மிருந்து வாங்குவதற்குப் பதிலாக வேறு மாற்றைத் தேடுவதில் முனைப்பைக் காட்டின. உக்ரைன் விவகாரம் தொடங்குவ தற்கு முன்பாக இந்த இரண்டு நாடுகளும் தான் ஐரோப்பியக் கண்டத்தில் அதிகமான அளவு ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதியைச் செய்து கொண்டிருந்தன. எரிபொருள் பற்றாக்குறையால் அனைத்து வகையான துறைகளும் நெருக்க டியைச் சந்திக்கின்றன. இந்நிலையில்தான் உக்ரைன் விவகாரம் முடிவுக்கு வராததால், எரிபொருள் பற்றாக்குறையும் தொடரும் என்று உலக வர்த்தகக் கழகம் எச்சரித்தி ருக்கிறது.

நோய்களை தீர்ப்பதாக ராம்தேவின் ‘பதஞ்சலி’ போலி விளம்பரம் கார்த்தி சிதம்பரம் புகார் பேரில் நடவடிக்கைக்கு உத்தரவு

புதுதில்லி, பிப். 25 - பல்வேறு நோய்களைத் தீர்ப்பதாக ஏமாற்று விளம்பரம் செய்த பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுப்பப் பட்டு வந்தன. இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு,  ஒருவழியாக, பதஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க, உத்தரகண்ட் பாஜக அரசுக்கு ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல் வேறு நோய்களை தீர்ப்பதாக செய்யப்படும் விளம்பரங்கள், “மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடைச் சட்டம் 1954”-க்கு புறம் பாக இருப்பதாக, கேரளாவைச் சேர்ந்த மருத்து வர் கே.வி. பாபு என்பவர் முன்பு புகார் அளித்தி ருந்தார்.  சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய பிரச்சனை, கண்புரை உள்ளிட்ட நோய்களை தீர்க்க  முடியும் எனக் கூறி எந்தவொரு மருந்துகளை யும் விளம்பரப்படுத்துவதை “மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடைச் சட்டம் 1954” தடை செய்கிறது. அவ்வாறிருக்கையில், பதஞ்சலி நிறுவனம் மேற்குறிப்பிட்ட சில நோய்களை தீர்க்கும் மருந்துகள் எனக் கூறி சிலவற்றை விளம்பரப்படுத்துவதாக தனது புகார் மனுவில் மருத்துவர்

கே.வி. பாபு கூறி யிருந்தார்.  ராம்தேவ் மோடி அரசுக்கு நெருக்கமான வர் என்பதால், இந்த புகார் தொடர்பாக ஒன்றிய ஆயுஷ் துறை அமைச்சகம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. “சட்ட விதி 170 (சித்தா, ஆயுர்வேத பொருட்களை விளம்பரப்படுத்த தடை) தொடர்பான வழக்கு, மும்பை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப் பட்டது.  மருத்துவர் கே.வி. பாலுவும், “மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954”-ஐ குறிப்பிட்டே, தான் புகார் அளித்த தாகவும், சட்ட விதி 170-ஐ தான் குறிப்பிடவே இல்லை எனவும் கூறிப்பார்த்தார். ஆனால், மருத்துவர் கே.வி. பாலுவின் இந்த விளக்கங்க ளையும் ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. இந்நிலையில்தான், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், பதஞ்சலி நிறுவனத்தின் மீது மருத்துவர் கே.வி. பாலு எழுப்பிய - அதே போன்றதொரு குற்றச்சாட்டை அண்மையில் புகாராக அளித்திருந்தார்.  இந்நிலையில், இந்த புகார் மனு தொடர் பாக கார்த்தி சிதம்பரத்துக்கு ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் தற்போது ஒரு கடிதத்தை அனுப்பி யுள்ளது. அதில், “”மருந்துகள் மற்றும் அற்புத  நிவாரணிகள் தடை சட்டம் 1954” -ஐ மீறிய பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க, உத்தரகண்ட் அரசின் உரிமம் வழங்கும் ஆணை யத்துக்கு (SLA) உத்தரவிடப்பட்டுள்ளது” என பதில் அளித்துள்ளது.