states

10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்

சென்னை,பிப்.16- தமிழ்நாட்டில் வருகிற ஜூன் மாதத்திற்குள் 10,000 அரசு பணி யிடங்கள் நிரப்பப்படும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில்  வெள்ளியன்று (பிப்.16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மக்களவை உறுப் பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நாங்கள் எத்தனையோ முத்தி ரையை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இதில் குறிப்பாக புதுமைப் பெண், நான் முதல்வன், மக்களை தேடி, மருத்துவம்,  ஒலிம்பிக் தங்கப்பதக்கம், உங்கள் பகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் திட்டங்களாகும். மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெருமளவில் பயன்பெற்றுள்ளனர். 30 நாட்களில் எங்களுடைய நடவடிக் கையின் மூலமாக 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையி லிருந்த கோரிக்கைகள் இந்த மக்களிடம் முதல்வர் திட்டத்தின் மூலம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கின்ற திட்ட மாக விளங்கும் மக்களுடன் முதல்வர் திட்டம். இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 60 ஆயிரத்து 560 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.