கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் திட்டமிட்ட தகவலைப் பரப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் காசோல் அருகே உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு (12 வயது) மாணவியை 3 இளைஞர்கள் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் பலாத் காரம் செய்தது. சிறுமி யின் தாயார் அளித்த புகா ரின் பேரில் குற்றச்சாட்ட ப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங் களூருவில் போக்கு வரத்து விதிமீறல்களை தடுக்க ஏஐ (செயற்கை நுண்ணறிவு) கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், போக்கு வரத்து விதிமீறல் வழக்கு களில் 96% வழக்குகள் ஏஐ தான் பதிவு செய்துள் ளது என பெங்களூரு காவல்துறையின் சிறப்பு ஆணையர் (போக்கு வரத்து) எம்.ஏ.சலீம் தக வல் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் 20 ஆப் பிரிக்கா நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி மகாராஷ் டிரா மாநிலம் புனேயில் செவ்வாயன்று தொடங் கிய நிலையில், இந்த கூட்டு ராணுவப்பயிற்சி மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
நாசாவின் நீர் கண்கா ணிப்பு செயற்கைக்கோள் ஸ்வோட் (SWOT) இன் முக்கிய கருவியான கரின் (KARIN) கடந்த ஜனவரி மாதம் செயலிழந்தது. பேக்கப் யூனிட் (BACKUP UNIT) மூலம் கரின் செயல் பாடுகளை மீட்டமைக் கும் பணி கடந்த 3 மாதங் களாக நடைபெற்று வந்த நிலையில், கரின் (KARIN) செயல்படத் தொடங்கி யுள்ளது.
6 வயது சிறுமியை பாலி யல் வன்கொடுமை செய்த குமார் என்பவரு க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30,000 அபராதம்; பாதிக்கப் பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை போக்சோ நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவ ட்டம் வடக்கு கோபுரம் அருகே அம்மணி அம்மன் மடத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில், பாஜக ஆன்மீகப் பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட அவரது கூட் டாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறை வாக இருக்கும் சங்கர் உள்ளிட்ட 3 பேரை போலீ சார் தேடி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டங் களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அர சுக்கே உள்ளது என நாடா ளுமன்றத்தில் திமுக எம்.பி. பார்த்திபன் கேள்வி க்கு, ஒன்றிய தகவல், ஒலி பரப்பு அமைச்சர் அனு ராக் தாகூர் பதிலளித்துள் ளார்.
உலகச் செய்திகள்
சூடானின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து புதிய அரசை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன. ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தப் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, புதிய அரசியல் சட்டத்தை இயற்றுவதற்கான ஒரு குழுவை அமைக்கப் போகிறார்கள். 11 பேர் கொண்ட இந்தக் குழுவில் ராணுவத்தில் இருந்து ஒருவரும், துணை ராணுவத்தில் இருந்து ஒருவரும் பிரதிநிதிகளாக இடம் பெறுவார்கள்.
சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சிலிகான் வேலி வங்கி மற்றும் கிக்னேச்சர் வங்கி போன்ற வங்கிகளைப் போல மேலும் 190 அமெரிக்க வங்கிகள் நெருக்கடியில் சிக்கப் போகின்றன. நான்கு பெரிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது. காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்டத்தை எட்டத் துவங்கினால், காப்பீடு செய்யப்பட்டுள்ள முதலீடுகளுக்கும் ஆபத்து என்று அந்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி யின் ஆலோசகர் அன்வர் கர்காஷ் வலியுறுத்தியுள்ளார். சிரியா வுக்கும், பிற அரபு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமை ஏற்படும் வாய்ப்பு கிடைத்திருப்பதோடு, தனது இடத்தை சிரியா மீண்டும் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தாண்டு காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் நாட்டை சீர்குலைத்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.