states

தனியார்மயம் தீவிரமானால் எதிர்காலம் என்னாவது?

பாஜக எம்.பி வருண் காந்தி கேள்வி

புதுதில்லி, ஏப்.19- இந்திய இளைஞர்கள் வேலை கிடைக்கா மல் ஏற்கெனவே வெறும் வயிற்றோடு பட்டினி கிடக்கும் நிலையில், தனியார்மயம் தீவிரமா கும் பட்சத்தில், அவர்களின் எதிர்காலம் மேலும் மோசமாகும் என்று பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் காந்தி - மேனகா காந்தி தம்பதியின் மகனுமான வருண் காந்தி, பாஜக -வின் உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதி எம்.பி. யாக உள்ளார். எனினும், லக்கிம்பூர் கெரியில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயி கள் 4 பேரை காரை ஏற்றி படுகொலை செய்தது முதல், பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தனது பிலிபித் தொகுதி யில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்  கொண்ட அவர், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகவும் ஒன்றிய பாஜக அரசை, விமர்  சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியிருப்ப தாவது:

“இந்தியாவில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந்தும், நமது இளைஞர்கள்  வேலையில்லாமல் பசியும் பட்டினியுமாக வெறும் வயிற்றோடு அலைகின்றனர். இப்படி கோடிக்கணக்கில் வேலையில்லாமல் இருக்  கும் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்  போகிறது, அவர்களுக்கு அடுத்து என்ன நடக் கும்? என்பதும் தெரியவில்லை!  வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சமத்துவத்தை நோக்கியே நமது போராட் டம் உள்ளது. இந்திய அரசியலமைப்பு, அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று கூறு கிறது. ஆனால், இது எப்போது சாத்தியமாக போகிறது? இந்த அரசு (மோடி அரசு) வாக்கு றுதி அளித்தபடி, யாருக்கும் வங்கிக் கணக்கில் பணமும் போடவில்லை. இரண்டு கோடி  வேலைவாய்ப்புகளையும் வழங்கவில்லை. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கு வோம் என்று சொன்னதும் நடக்கவில்லை.

அரசியல் என்பது நாட்டை கட்டமைக்கும் கருவி. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டமே நமது நாட் டின் உண்மையான போராட்டம். அரசியல்  கட்சிகளும், தலைவர்களும் போட்டியை விட்டுவிட்டு நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். தேசத்தின் எதிர்காலம் என்பது வெறும் பேச்சுக்கள் மூலமோ, தேர்த லில் வெற்றி தோல்வி மூலமோ உருவாக்கி விட முடியாது. நாட்டிற்கு செய்யும் உண்மை யான சேவை மூலமே அதனை உருவாக்க முடியும். இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கப்  போகிறது என்பதே இப்போது என் கவலை. நமது கனவுகள் பெரியவை. ஆனால், அதற் கேற்ப வளங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இங்கே அனைத்தையும் தனியார் மயமாக்கும்போது வேலை வாய்ப்புகளும் குறைக்கப்படும். இதனால் வேலையின்மை மேலும் அதிகரிக்கும்.” இவ்வாறு வருண்காந்தி கூறியுள்ளார்.