states

சர்க்கரை ஆலைகளின் பாக்கித் தொகை ரூ.1,217 கோடியை பெற்றுத் தர வேண்டும்

சென்னை, ஜூலை 4- தனியார் சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய ரூ.1,217 கோடி கரும்புக்கான பாக்கியை விவசாயி களுக்கு பெற்றுத்தர மாநில அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்புக்கான விலையுடன் (எப்ஆர்பி) சேர்த்து மாநில அரசு பரிந்துரை விலையை அறிவித்து வழங்கி வந்தது.  2013-14 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த  மாநில அரசின் பரிந்துரை விலையை  (எஸ்.ஏ.பி) தர இயலாது, மாநில  அரசுக்கு விலை அறிவிக்கும் அதிகா ரம் இல்லை  என்று தென்னிந்திய  சர்க்கரை ஆலைகள் உரிமையாளர் கள் சங்கம் (சிஸ்மா) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்தியது. 2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டுகள் மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை சர்க்கரை ஆலைகள் தரவில்லை. இதனையடுத்து, சிஸ்மா மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநில அரசு விலை அறிவித்திடும் அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை  ஏற்று தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய எஸ்.ஏ.பி பாக்கியை முத்தரப்பு கூட்டம் நடத்தி விவசாயி களுக்கு பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 வாரங்களில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வேல்மாறன், பொதுச்செயலா ளர் டி.ரவீந்திரன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- கரும்பு விவசாயிகளுக்கு எஸ்.ஏ.பி  பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு சர்க்கரை ஆலைகள் சார்பில் தனித் தனியாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மாநில அரசின் முதன்மை வழக்கறிஞர் மற்றும் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறி ஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், உதய குமார், ஸ்டாலின் ஆகியோர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளுக் காக வாதிட்டனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தர வின்படி, கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் தர  வேண்டிய எஸ்.ஏ.பி பாக்கி ரூ.209  கோடியை மாநில அரசின் உதவியுடன்  கூட்டுறவு ஆலைகள் விவசாயி களுக்கு வழங்கி விட்டது. 24 தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. தற்போது, சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில் மாநில அரசு முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். தனியார்  ஆலைகள் தரவேண்டிய நான்கு ஆண்டுகால எஸ்.ஏ.பி பாக்கித் தொகை  ரூ.1217 கோடி விவசாயிகளுக்கு பெற்றுத்தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.