states

2024-இல் செங்கோட்டையில் ‘இந்தியா’ கூட்டணி கொடியேற்றும்

எதிர்க்கட்சித் தலைவர்கள் பதிலடி


புதுதில்லி, ஆக. 16 - நாட்டின் 77-ஆவது சுதந்திர தினத்தை யொட்டி, தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.  அப்போது, “அடுத்த ஆண்டும் (2024  மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று) செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன். அப்போது இந்தியாவின் சாத னைகள் மற்றும் வளர்ச்சியைப் பட்டிய லிடுவேன்” என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த 90 நிமிட சுதந்திர தின உரையின் போதும், எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, ஊழல், தேசத்துரோ கம் மற்றும் திருப்திப்படுத்துதல் ஆகிய மூன்று தீமைகள் நாட்டை பெரிதும் பாதித் துள்ளன” என்றும் கூறிக்கொண்டார். இந்நிலையில்தான் பிரதமர் மோடி யின் பேச்சை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

வீட்டில்தான் மோடி கொடி ஏற்றுவார் : கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில், “பிரத மரின் உரை ஆணவமான பேச்சு. இப்போது 2023 நடக்கிறது, 2024-இல் செங்கோட் டையில் மீண்டும் தேசியக் கொடியை ஏற்று வேன் என்று சொல்வது அவரது ஆணவம். பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி களை விமர்சித்துக் கொண்டே இருக்கி றார், சுதந்திர தினத்தன்று கூட அவர் அதை தொடர்ந்தால் அவர் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்குவார்? அடுத்த ஆண்டு மோடி மீண்டும் தேசியக் கொடி ஏற்றுவார்.. ஆனால், செங்கோட்டையில் அல்ல, அவரது சொந்த வீட்டில்..” என்று பதிலடி கொடுத்துள்ளார். “மேலும், ஒவ்வொருவரும் தேர்தலில் மீண்டும் நாங்கள் வெல்வோம்; ஆட்சியை பிடிப்போம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வெற்றி, தோல்வி என்பது மக்களின் கைகளில், வாக்காளர் கைகளில்தான் உள்ளது” என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

2024 ‘இந்தியா’ கூட்டணியின் முறை : லாலு

“நாட்டு மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கி றேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் போன்ற பெரிய மனிதர்களுக்கு எனது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கி றேன். அவர்களின் பங்களிப்புகளை தேசம் ஒருபோதும் மறக்க முடியாது” என்று பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்திருந்தார். “அடுத்த ஆண்டு செங்கோட்டையில் பிரதமர் மோடியால் தேசியக் கொடியை ஏற்ற முடியுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் மூவர்ணக் கொ டியை ஏற்ற முடியாது. அது நடக்காது.இது அவரது கடைசி முறை. அடுத்தமுறை, செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்று வது எங்கள் (I.N.D.I.A. கூட்டணியின்) முறை” என்றும் லாலு குறிப்பிட்டார். பாஜக வீழ்த்தப்படும்: மம்தா “எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி களத்தில் இறங்கி நாடு முழுவதும் பாஜக வை வீழ்த்தும். தில்லி செங்கோட்டையில் இந்த முறை நரேந்திர மோடி ஆற்றும் உரை, பிரதமராக அவர் ஆற்றும் கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ‘இந் தியா’ கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றும். நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்படுவதைப் போல மேற்கு வங்கத்திலும் பாஜக வீழ்த்தப்படும். ரபேல் போன்ற விவகாரங்களில் பாஜக மீது ஊழல் கறை படிந்திருக்கிறது” என்று மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவ ருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் மக்கள் அன்பையே கோருகின்றனர் : சுலே

“ஒவ்வொரு கட்சியிலும் வாரிசு அரசி யல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, ஒருவரை நோக்கி நீங்கள் கை நீட்டி பேசும் போது உங்களை 3 விரல் கள் நோக்கி இருக்கும் என்றார். அதனைத் தான் திரும்பவும் சொல்கிறோம். மணிப்பூர் மக்கள் அன்பையும் ஆதரவையும்தான் கேட்கின்றனர்” என்று தேசியவாத காங்கி ரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே குறிப்பிட்டுள்ளார்.

மோடி பொறுமை காக்க வேண்டும் : கே.சி. வேணுகோபால்

“2024 தேர்தலில் யார் வெல்வது என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆகை யால் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.