states

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானவன் அல்ல ஏகபோகத்தைத் தான் எதிர்க்கிறேன்

ஜெய்ப்பூர், அக்.8- நான் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான வன் அல்ல, அவர்களின் ஏகபோகத் தைத் தான் எதிர்க்கிறேன் என்று ராகுல்  காந்தி கூறியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவர் கவு தம் அதானி, அடுத்த ஐந்து முதல் ஏழு  ஆண்டுகளில் இராஜஸ்தானில் ரூ. 65,000 கோடி முதலீடு செய்து 40,000க்கும்  மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக  வேலை வாய்ப்புகளை உருவாக்குவ தாக இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் கூறினார். இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப் பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் “இன்வெஸ்ட் இராஜஸ்தான் உச்சி மாநாட்டில்” பேசிய அதானி, இராஜஸ்தானில் பல தொழில் துறைகளில் ரூ.35,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளோம். புதுப்பிக்கத்தக்க வணிகத்தில் எங்கள் முதலீட்டைத் தொடர்வதால், ரூ.50,000 கோடி முதலீட்டில் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று அதானி கூறினார்.  உலகின் மிகப்பெரிய காற்றாலை-சூரிய கலப்பின மின் உற்பத்தி நிலைய செயல்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அந்த நிறுவனமும் இராஜஸ்தானில் தான் உள்ளது என்றார். உச்சிமாநாட்டை தொடங்கிவைத்த இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பல நூற்றாண்டுகளாக வறட்சி மற்றும் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தானியர்களின் தைரியத்தை மிகவும் பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் குஜராத் மக்கள் மிகவும் திற மையானவர்கள். சுதந்திரத்திற்கு முன் பும் பின்பும்   மகாராஷ்டிரா மற்றும் குஜ ராத் எப்போதும் பொருளாதார ரீதியாக  நன்றாகவே உள்ளன என்றார்.

 இரண்டு நாள் உச்சிமாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 4,000க்கும்  மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள்  உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள தாகக்  கூறப்படுகிறது. டாடா பவர்  லிமி டெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பிரவீர் சின்ஹா, மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தின் மூத்த அதி காரி அனிஷ்ஷா, செயின்ட் கோபன் இந்தியா தலைவர் பி.சந்தானம் ஆகியோ ரும் இந்த மாநாட்டில் கலந்துகொண் டுள்ளனர். இராஜஸ்தானில் 2023-ஆம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள் ளது. இந்த நிலையில் மோடியின் ஏற்  பாட்டின் பேரில் கவுதம் அதானி உள் ளிட்ட கார்ப்பரேட்டுகள் மாநாட்டில் கலந்து  கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. ராகுல் காந்தி விளக்கம் இராஜஸ்தான் முதல்வர் அசோக்  கெலாட், தொழிலதிபர் கெளதம் அதா னியைப் புகழ்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். ராகுல் காந்தியோ பாஜக அரசை மட்டுமல்ல அதானி-அம்  பானியைத் தொடர்ந்து தாக்கி வரு கிறார். கர்நாடகத்தில் நடைபயணம் மேற் கொண்டுள்ள ராகுல்காந்தியிடம் செய்தியாளர்கள் ரூ.60 ஆயிரம் கோடி  முதலீடு குறித்து கேள்வி எழுப்பி னர். அப்போது இடைமறித்த ஜெய்  ராம்ரமேஷ்,  நடைபயணம் குறித்து மட்  டும் கேளுங்கள் என்றார். ஜெய்ராம் ரமேஷை இடைமறித்த ராகுல் காந்தி, செய்தியாளர்கள் முக்கியமான கேள்வி யெழுப்பியுள்ளனர். இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்றார். தொடர்ந்து  “அதானி இராஜஸ்தானுக்கு ரூ. 60,000 கோடி கொடுத்துள்ளார். எந்த  முதலமைச்சரும் அத்தகைய வாய்ப்பை மறுக்க முடியாது. உண்மை யில், அத்தகைய வாய்ப்பை ஒரு  முதல்வர் மறுப்பது சரியாக இருக்காது” என்றார்.  மேலும் பேசிய அவர், “நான் எந்த  வகையிலும் கார்ப்பரேட்கள், வணி கங்களுக்கு எதிரானவன் அல்ல. இன்று  நாம் பார்ப்பது அனைத்து வணிகங்க ளின் முழுமையான ஏகபோகத்தைத் தான். அதுதான் பிரச்சனை என்றார்.