states

img

ராஜஸ்தானில் இந்தியா கூட்டணி உடன்பாடு

ஜெய்ப்பூர், மார்ச் 22- வரும் மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம், சிகர் மக்கள வைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.  விவசாயிகள் போராட்டங்க ளின் மூலம் இடதுசாரி இயக்கங்கள் வலுப்பெற்று வரும் ராஜஸ்தானில், பாஜகவைத் தோற்கடிக்க இணை ந்து தேர்தலைச் சந்திப்பது என்று காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதில் விவ சாயிகள் போராட்டங்களின் மையமான சிகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று முடி வெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவைத் தொகுதியில் சிகர், ஜுன்ஜுனு, பிகானிர் மற்றும் சுரு ஆகிய தொகுதிக ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளிலும் பரவலான வாக்கு வங்கியை வைத்திருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர் கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறது.

பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்  சங்கத்தின் செல்வாக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் முதன்முறையாகக் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு மக்களவைத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சந்திக்கப் போகிறது.  

கடந்த முறை 25 தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக வுக்கு, இந்த முறை பல தொகுதிகளில் தோல்வி கிடைக்கப் போகிறது. பாரதீய ஆதிவாசி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ராஜஸ்தானில் வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது. இதில் சிகர் மக்களவைத் தொகு தியில் 19 ஆம் தேதியன்று வாக்குகள் பதிவாகின்றன.

வெற்றி நிச்சயம்
சிகர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடை பெற்றது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஐந்து தொகுதிக ளிலும், பாஜக மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பல தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது. தற்போது காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு கண்டு, சிகர் தொகுதியில் நிற்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளரின் வெற்றி நிச்சயமாகியுள்ளது.