states

img

சத்தீஸ்கர்: டிராக்டர் மீது லாரி மோதிய விபத்து  

சத்தீஸ்கர் மாநிலத்தில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சத்தீஸ்கர் மாநிலம் மஜ்ரகட்டா கிராமத்தைச் சேர்ந்த சிலர் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கரியாபந்த் மாவட்டம் ஜோபா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த லாரி டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் அந்த டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த வண்டியில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 17 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

அதனைதொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ .2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.   

;