சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக விஷ்ணு தேப் சாய் உள்ள நிலையில், 3 நாட்க ளுக்கு முன் காண்டெர் மாவட் டம் கோயலிபேடா பகுதியில் உள்ள ஹுர்தராய் வனப்பகுதி யில் 3 நக்சலைட்டுகள் என் கவுண்டரில் கொல்லப்பட்ட தாக காண்டெர் மாவட்ட எஸ்.பி. கல்யாண் எலிசெலா தகவல் தெரிவித்தார். ஆனால் 3 பேரின் உடல்கள் மறைமுக வைக் கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
போலி என்கவுண்டர்; கண்டனம்
இந்நிலையில், என்கவுண்டர் நடத்தப்பட்டு 2 நாட்களுக்கு பின்னர் செவ்வாயன்று உயிரி ழந்த 3 பேரின் குடும்பத்தினர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர். இதில் “போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் நக்சலைட்டுகள் இல்லை. 3 பேரும் அப்பாவிகள். கோயலி பேடாவில் நிகழ்ந்த என்கவுண் டர் போலியானது. நக்சலைட்டு களை ஒழிக்க முடியாமல் போலீ சார் அப்பாவி மக்களை கொன்று வருகின்றனர்” என கூறினர். இந்த குற்றச்சாட்டுக்கு காண் டெர் மாவட்ட காவல்துறை மறுப்பு மட்டுமே தெரிவித்துள் ளது. மேற்கொண்டு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
3 மாதங்களில் 14 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் தற்போது வரை 3 மாதத்தில் நக்சலைட்டுகளின் அமைப் பைச் சேர்ந்த 14 பேர் என்கவுண் டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளதாக அம்மாநில பாஜக அரசு கூறி வருகிறது. 3 நாட்க ளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் போலி என்கவுண்டர் என குற் றச்சாட்டு எழுந்துள்ள நிலை யில், ஏற்கெனவே சுட்டுக்கொல் லப்பட்ட மற்ற 11 பேர் நக்சலைட் டுகளா? இல்லை அப்பாவி பொதுமக்களா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
மீண்டும் என்கவுண்டர்: 4 பேர் பலி
செவ்வாயன்று பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜங்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக நக்சல் தடுப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், காவல்துறையினர் அங்கு சென்றதும் நடைபெற்ற இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாகவும் பிஜாப்பூர் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரி வித்துள்ளார்.