states

img

சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகள் பலி  

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பலியாகினர்.  

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் பயற்சி மேற்கொண்டிருந்த அரசு ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு ஓடுபாதையில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகிய  இருவரும் உயிரிழந்தனர். இதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.  

முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.  

இதையடுத்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் மாநில அரசின் உத்தரவின்பேரில், இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.