சண்டிகரின் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து இந்தி யாவின் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மனோஜ் ஷோங்கரின் வெற்றி, சூழ்ச்சி மூலம் பெறப்பட்டது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
தலைமை அதிகாரியே வாக்குச்சீட்டுகளை சிதைக்கிற காட்சிக ளை திகைப்பூட்டும் வகையில் கண்டறிந்த இந்திய தலைமை நீதிபதி” இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து”என்று கூறியுள்ளார். ஜனவரி 30 அன்று, தேர்ந்தெடுத்த கவுன்சிலர்கள் அளித்த எட்டு வாக்குகளை செல்லாது என்று அறிவித்து, பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே பலரும் இவ்வாறு விமர்சித்திருந்தனர்.
நீதிமன்ற தலையீடு!
பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஜனவரி 30 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. முன்னதாக இது ஜனவரி 18 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நியமன கவுன்சிலரும் பாஜக சிறுபான்மை பிரிவு செயல்பாட்டாளருமான அனில் மசிஹ் உடல்நிலை சரியில்லாமல் போனது தெரிய வந்ததால் பிப்ரவரி 6க்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டால் ஜனவரி 30 அன்று தேர்தல் நடத்த வேண்டி வந்தது. கூட்டாக போட்டியிட்ட இரு கட்சிகளும் வெற்றி பெறும் என்பதால் தான் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மாநக ராட்சியில் காங்கிரசுக்கு ஏழு உறுப்பினர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 12 உறுப்பினர்களும் உள்ளனர்.ஆனால் மேயர் பதவிக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 12 வாக்குகள் மட்டுமே பெற்றார். எட்டு வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. பாஜகவின் ஷோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
குறுக்கு வாக்களிப்பு!
தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கவுன்சிலர்கள் மற்றும் சண்டிகரின் நாடாளுமன்ற உறுப்பினர் மேயரை தேர்வு செய்கின்றனர். மேயரை தேர்ந்தெடுப்பதற்கு அதுவும் ஒரு சிறிய தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பில் அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானது. வேட்பாளருக்கு ஆதரவாக எழுந்து நிற்கலாம் .அல்லது கைகளை உயர்த்தலாம். இதை விட்டுவிட்டு வாக்கு சீட்டுகள் மூலம் தங்கள் விருப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது “குறுக்கு வாக்களிப்பில்” சந்தேகம் இருப்பதை குறிப்பதாகும்.
தேர்தலுக்கு தலைமை தாங்கிய மசிஹ், செல்லாத வாக்கு சீட்டுகளை வேட்பாளர்களுக்கு காட்டவில்லை என குற்றம் சாட்டப் பட்டது, இந்த செயலை சந்தேகத்திற்குரியதாக்கியது. இதன் விளை வாக இந்த வாக்குகள், ஆம் ஆத்மி கட்சிக்கு வேட்பாளர்களுக்கு சென்று இருக்க வேண்டியவை, ஏன் செல்லாது என அவை அறிவிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை.
உச்ச நீதிமன்றம் குட்டு!
வாக்குச்சீட்டுகளையும் பதிவேடுகளையும் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்குமாறும், உத்தேச மாநகராட்சி கூட்டத்தை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் மிகச் சரியாக கூறியுள்ளது.
இந்த நிகழ்ச்சிப் போக்குகள் நாட்டில் உள்ள ஒரு மாநகராட்சியின் மேயர் தேர்தல் பற்றியதாக இருக்கலாம். ஆனால் ஒரு தேர்தல் மிகவும் துணிச்சலாக மோசடி செய்யப்படலாம் என்ற எண்ணம் நாடு முழு வதும் ஜனநாயகத்திற்கு கடுமையான விளைவுகளையும் தாக்கங்க ளையும் ஏற்படுத்துவதாகும்.
தேர்தலை ரத்து செய்ய வேண்டும்!
தேசிய அளவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை நாடும் ஒரு அரசியல் கட்சி எந்த ஒரு தேர்தலையும் இந்த முறையில் கையாள்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும்.முறைகேடு களுக்கு எதிரான பாதுகாப்புகளை உறுதி செய்து புதிய தீர்ப்பை வழங்கு வது மட்டுமே நீதியின் நலனை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.
தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம் 7/2/24,
தமிழில்: கடலூர் சுகுமாரன்