கொச்சி, ஜுலை 5- இந்தியாவின் வணிக நட்பு மாநிலக் குறியீட்டில் கேரளம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. புதிய தரவரிசைப் பட்டிய லில், கேரளா 75.49 சதவிகிதம் மதிப்பெண் கள் பெற்று 28 ஆவது இடத்தில் இருந்து 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: மத்திய தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை யான டிபிஐஐடி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு வணிகத்தை எளிதாக அமைப்பதன் அடிப்படையில் தொழில்முனைவோரின் கருத்துக்களை சேகரிக்கிறது. இறுதி மதிப்பெண்கள் மற்றும் பயனர் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், மாநிலங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. சிறந்த சாதனையாளர்கள், சாதனையாளர்கள், ஆர்வலர்கள், வளர்ந்து வரும் வணிகச் சூழல் அமைப்புகள். இதில் ‘ஆர்வலர்கள்’ பிரிவில் கேரளாவை சேர்க்க முடிந்தது. தொழில்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் அவ்வப் போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்ட கொள்கை முடிவுகள் ஆகியவை இந்த எழுச்சிக்கு உதவி யுள்ளன. நிலையான வளர்ச்சியுடன் முதலீட்டை வலியுறுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறை கேரளாவை விரைவான வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. பின்னூட்டங் ங்களின் அடிப்படையில், அடுத்த ஆண்டுக்குள் முதல் பத்து இடங்களுக்குள் எட்டுவதுதான் கேரளாவின் இலக்கு என்று அமைச்சர் கூறினார்.