திருவனந்தபுரம், பிப்.6- ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி விடுதலையான சொப்னா சுரேஷ் பல்வேறு குற் றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வருக்குத் தெரி யாது எனவும், கே.டி.ஜலீல் நிரப ராதி எனவும் அதில் குறிப்பிட் டுள்ளார். தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி யில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது: தூதரகப் பதவியை ராஜி னாமா செய்தது சிவசங்கர் கூறிய தால்தான். லைஃப் மிஷன் தொடர் பாக யூனிடாக் தேர்வு செய்யப் பட்டது அவருக்குத் தெரிந்தது தான். ஆனால் முதல்வருக்கு இது தெரியாது. ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் துணைத் தூதரகத்தில் இருந்து மத நூல்கள் மற்றும் பேரீச்சம் பழங்களை விநியோ கித்ததில் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் குற்றமற்றவர். முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணனுக்கும் லைஃப் மிஷன் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு வேலை பெற் றுத்தந்தவர் சிவசங்கரன்தான். ஐபோன் கொடுத்தது சிவசங்கர னுக்கு மட்டுமல்ல என்றும் சப்னா கூறினார்.