திருவனந்தபுரம், மே 5- கேரள மாநிலமே ஓர் ஒற்றுமையின் கதைதான்; இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பூமி கேரளா. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பாசிச இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு கேரளா ஒரு போதும் துணை நிற்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். கேரள தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் பொன்விழா கருத்தரங்கில், ‘இந்திய அரசியலில் ஆர்எஸ்எஸ் மற்றும் வகுப்புவாதம்’ என்ற தலைப்பில் யெச்சூரி பேசினார். அப்போது அவர் மேலும் கூறிய தாவது: ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்களுக்கு ஆதரவாக புதிய கதை களை உருவாக்கி வருகின்றன. போலி வரலாறுகளை பரப்புகிறது. மூட நம்பிக்கையை புகுத்தி புதிய தலை முறையை பகுத்தறிவு சிந்தனையி லிருந்து விலக்கி வைப்பதே இவர்களின் முயற்சி. பாடப்புத்தகங்கள் கூட அதற்காக மாற்றி எழுதப்படுகின்றன. ஊடகங்களையும் நீதி அமைப்பையும் கட்டுப்படுத்துகிறார்கள். நாட்டின் சுதந்திரமான புலனாய்வு அமைப்பு களைக் கூட பா.ஜ.க அரசியல் ஆயுதங் களாக மாற்றியுள்ளது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீது பதிவாகியுள்ளன. நாட்டின் சட்டப் பேரவைகளில் கூட, எதிர்ப்புக் குரல்களை அகற்ற பாஜக முயற்சிக்கிறது.
ஜான் பிரிட்டாஸ் எம்.பி எழுதிய கட்டுரைக்கு எதிராக அவருக்கு மாநிலங்களவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறார். இது அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். நாட்டில் நடப்பது கூட்டுக்களவாணி முதலாளித்துவமாகும். நாட்டின் செல்வங்களை அதானிகளும் பாஜக நண்பர்களும் சூறையாடுகிறார்கள். அதானிக்கு எதிரான கேள்விகள் கூட மாநிலங்களவையில் இருந்து நீக்கப்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் மத சிறுபான்மையினர் வேட்டையாடப்படுகிறார்கள். அவர் களுக்கு எதிராக புல்டோசர் அர சியல் நடத்தப்படுகிறது. பா.ஜ.க., வுக்கு அதிகாரம் இல்லாத மாநிலங் களில், ஆளுநர்களை பயன்படுத்தி, நிர்வாகத்தை முடக்க முயற்சிக்கின்றனர். ஆர்எஸ்எஸ், பாஜக விரும்புவது போல் பாசிச இந்து ராஷ்டிரம் உருவா னால், இந்திய அரசமைப்புச் சட்டமே அழிக்கப்படும். பா.ஜ.க.வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது’ அதற்கான முயற் சிகளை இடதுசாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்தியா வீழ்ச்சியடை யாமல் இருக்க அனைவரும் ஒற்றுமை யாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கத்துக்கு கேஎஸ்இஏ தலைவர் பி.ஹனி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.என்.அசோக்குமார், துணைத் தலைவர் எஸ்.ஷீலாகுமாரி ஆகியோர் பேசினர்.