states

img

வயநாடு நிவாரண நிதிக்கு சிபிஎம் எம்எல்ஏ-க்கள் 1 மாதச் சம்பளம்

திருவனந்தபுரம், ஆக. 3 - வயநாடு நிலச்சரிவு மற்றும் மக்களின் உயிரிழப்பு துயரம் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், நிவாரணப் பணிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கேரள மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒருமாத சம்பளத்தை நிதியாக வழங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் இடது ஜன நாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சிபிஎம் எம்எல்ஏக்கள் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 

முதல்வர் பினராயி விஜயன் ரூ. 1 லட்ச மும், அவரது மனைவி டி.கே. கமலா ரூ. 33 ஆயிரமும் நிதியுதவி அளித்துள்ளனர். முன்ன தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவி ந்தன், “கட்சியின் கேரள மாநிலக்குழு சார்பில் வயநாடு நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும்” என அறிவித்தார். 

அதேபோல கட்சியின் திரிபுரா மற்றும் தமிழ்நாடு மாநிலக்குழுக்கள் தலா ரூ. 10  லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.