states

img

கடலை பாதுகாக்க அலை அலையாய் கேரளத்தில் எழும் போராட்டங்கள்

திருவனந்தபுரம், அக்.17 ‘கடலின் உரிமையாளர்களான எங்களை வீழ்த்த முயற்சிக்கும் கார்ப்பரேட் மற்றும் மோடி நிர்வாகத்திற்கு எதிராக கடல் குழந்தைகளாகிய நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள உறுதி ஏற்போம்’- என்பது கட லோர மீனவர்களும் மக்களும்  எடுத்துக்கொண்ட உறுதி மொழி. இது கேரளத்தின் கடலோரப் பகுதிகள் மட்டுமல்லாது,  நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. கேரளத்தில் 70 கட லோர மையங்களில் கடல் பாதுகாப்பு சங்கிலி உருவாக்கப் பட்டுள்ளது. ‘கடலின் குழந்தைகளுக்காக’ என்ற முழக்கத் தின் கீழ் கேரள மீனவர் கூட்டமைப்பு (சிஐடியு) தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மீனவர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில்  அக்.17 செவ்வாயன்று  நீண்டகரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   கொல்லம்    மாவட்டச் செயலாளர் எஸ்.சுதேவன் தொடங்கி வைத்தார். சுஜித் விஜயன்பிள்ளை எம்எல்ஏ, மீனவர் கூட்டமைப்பு மாநி லச் செயலர் டி.மனோகரன்  உள்ளிட்டோர் பேசினர். ஆலப்பட்டு நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சூசன் கோடி துவக்கி வைத்தார். மீனவர் கூட்டமைப்பு துணைத் தலைவர் ஜி.ராஜதாஸ் உள்ளிட்டோர் பேசினர்.