states

img

ஓணம் பண்டிகைக்கு வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

திருவனந்தபுரம்,ஜுலை 29-  ஓணம் விடுமுறை மற்றும் வேளாங் கண்ணி திருவிழாவையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேளாங் கண்ணி மார்க்கத்தில் கூடுதல் ரயில் சேவை தொடங்க உள்ளது. எர்ணாகுளம் - வேளாங் கண்ணி வழித்தடத்திலும், திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வழித்தடத்திலும் இந்த சேவை தொடங்குகிறது. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந் திர சிறப்புக் கட்டண ரயில் (06039/06040) ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 11 வரை திங்கட் கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்குப் புறப்படும். செவ்வாய்க் கிழமைகளில் வேளாங் கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் புதன்கிழமைகளில் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென் றடையும். கோட்டயம் மற்றும் தென்மலா வழி யாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6 வரை புதன்கிழமைகளில், திருவனந்தபுரம் சென்ட்ரல் -வேளாங்கண்ணி (06020/06019) வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வியாக் கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு திரு வனந்தபுரத்தை வந்தடையும்.