திருவனந்தபுரம், ஜன.21- ஜி-20 நாடுகளின் முதலாவது சுகாதாரப் பணிக்குழுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி இந்தியா ஏற்றுக் கொண்டது. அதன்பின் நடை பெறும் அதன் முதலாவது சுகாதாரப் பணிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடெச்சா, “நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மீதான தாக் கத்தை கொரோனா பெருந்தொற்று ஏற் படுத்தியதை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நவீன மருத்துவத்துடன் பாரம் பரிய மருத்துவ முறைகளை ஒருங்கி ணைத்து வலுப்படுத்த வேண்டும். நவீன மருந்துகளுடன் பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் இணைப்பது நோயை விரைவில் குணப்படுத்த உதவும். ஒருங்கிணைந்த சிகிச்சை முறை காலத்தின் தேவை. குறைந்தது பத்தாண்டுகளுக்கான உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை இந் தியா தீர்மானிக்கப் போகிறது என்றார். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரே சில், கனடா, சீனா, பிரான்ஸ், இத்தாலி உள் ளிட்ட ஜி-20 உறுப்புநாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகளும் வங்கதேசம், எகிப்து, மொரீ சியஸ் நாடுகளின் சிறப்பு அழைப்பாளர் களும் கலந்துகொண்டனர். ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்பிரிக்க ஒன்றியம், ஆசியான், உலகப்பொருளாதார அமைப்பு, உலகச் சுகாதார நிறுவனம், உலக வங்கி, யுனிசெஃப் போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதி நிதிகள், நிதி ஆயோக்கின் சுகாதாரப் பிரிவு உறுப்பினரும், ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளருமான ராஜேஷ் பூஷன் ஆகி யோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.