திருவனந்தபுரம், டிச.26- திருவனந்தபுரத்தில் கடலில் காணாமல் போன 3 பேரை தேடும் பணி திங்களன்று காலையில் மீண்டும் தொடங்கியது. தேடப்பட்டு வந்தவர் களில் ஒருவரின் சடலம் ஞாயிறன்று (டிச.25) கண்டெடுக்கப்பட்டது. புத்தன்தோப்பில் 2 பேரையும் அஞ்சுதெங்கு மாம்பள்ளியில் ஒருவரை யும் காணவில்லை. புத்தன்தோப்பில் இருந்து ஸ்ரேயாஸ் (16), சஜித் (19) ஆகியோரைக் காணவில்லை. மாம் பள்ளியைச் சேர்ந்த சஜன் ஆண்டனி (34) என்பவர் அஞ்சுதெங்கில் இருந்து காணாமல் போயுள்ளார். தும்பா கடலில் குளிப்பதற்குச் சென்று காணாமல் போன ஆறாட்டுவாஞ்சி யைச் சேர்ந்த பிராங்கோ என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் உதவி யுடன் தேடுதல் வேட்டை நடந்து வரு கிறது. ஞாயிறன்று இரவு தேடுதல் நடத்தப்பட்டது, ஆனால் பெரும் அலைகள் மற்றும் உள் நீரோட்டங் களால் தேடுதல் பணி தடைபட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வந்தவர்கள், கடற்கரை யில் குளித்தபோது விபத்தில் சிக்கி னர். கடந்த நாட்களை விட ஞாயிற்றுக் கிழமை கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. 3.2 மீட்டர் உயரம் வரை கடல் அலை கேரள கடற்கரையில் டிசம்பர் 26 திங்களன்று இரவு 11.30 மணி வரை 2.5 முதல் 3.2 மீட்டர் உயரத்தில் அலை கள் எழ வாய்ப்புள்ளதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடல் சீற்றம் வலுப்பெற வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் அறி வுறுத்தலின்படி, அபாய பகுதிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டும். துறைமுகத்தில் மீன்பிடி படகுகள், வள்ளங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும். படகுகளுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடை பிடிப்பதன் மூலம் மோதல் அபாயத்தை தவிர்க்கலாம். மீன்பிடி உபகரணங் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடற்கரைக்கு செல்வது மற்றும் கடலில் உள்ள செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.