states

img

வந்தே பாரத் தொடக்க பயணத்தில் பாஜகவினருக்கே சீட்டுகள்

திருவனந்தபுரம், ஏப்.26- வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் ஓட்டத்தில் பெரும்பாலான பயண சீட்டுகளை பாஜக தொண்டர்களே பெற்றனர். அவர்களுக்காக மூன்று பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. இந்த பயணச் சீட்டுகளை ரயில் ரசிகர்கள் என்ற குழு ஏற்பாடு செய்தது. பாஜகவினர் கட்சி  கொடியுடன் வந்த னர். முக்கிய பிர முகர்களை தவிர்த்த தோடு வந்தே பாரத் துவக்க பயணத்தை கட்சி நிகழ்ச்சியாகவே மாற்றியது பாஜக. முதல் பயணம் மேற்கொள்ள பலர் ரயில்வே நிர்வாகத்தை அணுகினர். ஆனால், அவர்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில், பாஜகவினர் தங்கள் விருப்பப்படி மாவட்ட வாரியாக சீட்டுகளை விநியோகித்துள்ளனர். 1024 சேர்கார் இருக்கைகளும், 104 எக்ஸிகியூட்டிவ் சேர்கார் சீட்டுகளும் வழங்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தாலும், அதிக அளவில் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. பல நிலையங்களில் ரயிலில் ஏற பெரும் கூட்டம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது.