கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத் தின் தொடுபுழா நகராட்சி தேர் தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அபார வெற்றி பெற்று நகராட்சி யை கைப்பற்றியது.
தொடுபுழா நகராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடது ஜனநாயக முன்னணி வேட்பா ளராக சிபிஎம்மின் சபினா பிந்து களமிறங்கி னார். ஆனால் காங்கிரஸ் தலைமையி லான யுடிஎப் கூட்டணிக்குள் நகராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்து வது தொடர்பாக பிளவு ஏற்பட்டது. யுடிஎப்-இல் அங்கம் வகிக்கும் முஸ்லீம் லீக்கும், காங்கிரஸ் கட்சியை போன்று தனியாக வேட்பாளர்களை நிறுத்தின. இதனால் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குப் பதிவுக்கு முன்னர் மோதல் ஏற்பட்ட நிலை யில், வாக்குப்பதிவின் முதல் சுற்றில் வெளிநடப்பு செய்த முஸ்லிம் லீக், கடைசி சுற்றில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக களமிறங்கியது. முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் எல்டிஎப் வேட்பா ளர் சபினா பிந்துவுக்கு வாக்களித்தனர். இதன்மூலம் சபினா பிந்து 14 வாக்கு களை பெற்று அபார வெற்றி பெற்று தொடுபுழா நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். யுடிஎப் சார்பில் காங்கிரஸின் கே.தீபக் 10 வாக்குகள் மட்டுமே தோல்வியை தழுவினார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் நக ராட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் மீண்டும் மோதிக் கொண்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மோதலை தவிர்த்தனர்.