states

img

முதல் பத்து மருத்துவமனைகளில் ஒன்றாக திருவனந்தபுரம் எஸ்ஏடி அரிய சாதனை

திருவனந்தபுரம், டிச.30- திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஏ.டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரிய வகை நோய்களுக்கான சிறப்பு மைய பட்டியலில் ஒன்றிய அரசு சேர்த்துள்ளது. நாட்டின் முதல் பத்து மருத்துவமனைகளின் பட்டியலில் எஸ்ஏடி உள்ளது. இது கேரளத்தின் மிகப்பெரிய சாதனை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீணா ஜார்ஜ் மேலும் கூறுகையில், எஸ்ஏடி மருத்துவமனை முன்னணி பட்டியலில் இடம்பிடித்தது அரிதான நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் புரட்சி கரமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றார். உரிய நேரத்தில் சிறப்பான மையம் (சென்டர் ஆப் எக்சலன்ஸ்) என்பதை நிஜமாக்குவதற்கு மேலும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரிதான நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சையளித்து, தடுக்கும் நோக்கத்துடன், அரிய நோய்களுக்கான தேசியக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரிதான நோய்களுக்கான சிறப்பு மையங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக நிர்ண யிக்கப்பட்ட அளவுகோல்களின்படி மத்திய குழு நடத்திய தேர்வில் காணப்பட்ட சிற ப்பைத் தொடர்ந்து எஸ்ஏடி தேர்ந்தெடுக்கப் பட்டது. எஸ்ஏடியில் மரபணு நோய்களுக்கான ஸ்கிரீனிங், கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஒத்துழைப்பும் உள்ளது. ஏதேனும் அரிய நோய் கண்டறியப்பட்டவுடன், சிறப்பு  மையத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற லாம். கேரளாவில் வேறு எந்த மருத்துவ மனையிலும் அரிதான நோய் கண்டறி யப்பட்டாலும், எஸ்.ஏ.டி மருத்துவமனை யின் சிறப்பு மையத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக கூடுதல்  வசதிகள் மற்றும் கூடுதல் பணியாளர்களை மாநில அரசு உறுதி செய்யும் என அமைச்சர் தெரிவித்தார். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகில் செயல்படும் எஸ்ஏடி மருத்துவ மனை தாய் சேய் சிகிச்சை மற்றும் பிர சவத்துக்கான சிறப்பு மருத்துவமனை யாகும்.