states

img

ஒளிவெள்ளத்தில் திருவனந்தபுரம் நகரம் ஓணம் வார விழா கோலாகல தொடக்கம்

திருவனந்தபுரம், ஆக.27-

       ஏழு நாட்கள் நீடிக்கும் ஓணம் வாரக் கொண்டாட்டம் தலைநகரில் வசிப்பவர்க ளுக்கு உற்சாகத்தை அளிக் கும் வகையில் நகரமே விளக்கு ஒளியில் குளிக்கிறது.

      உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளால் செவ்வாயன்று திருவோ ணம் பண்டிகை கொண்டா டப்படுகிறது. அதை முன்னி ட்டு ஞாயிறன்று மாலை திருவனந்தபுரம் நிஷாகந்தி யில் ஓணம் வார விழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞர் மல்லிகாசாரபாய் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்ட னர்.  

     இந்நிகழ்ச்சியில் மாநி லப் பள்ளிக் கலை விழாவில் முதலிடம் பெற்ற பட்டாம்பி  பெரிங்கோடு பள்ளி மாண வர்களின் பஞ்சவாத்தியம், கலாமண்டலம் நாட்டியக் கலைஞர்களின் நடனச் சிற்பம் ஆகியவையும் இடம் பெற்றன. பிஜுநாராயணன் - ரிமி டாமி  குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மாநிலத் தலைநகர் மட்டு மல்லாது பிற மாவட்டங்க ளில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்பி யல்புகளுடன் வடிவமைக் கப்பட்ட அரங்குகள், தனித் துவமான கேரள கலை வடி வங்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து மாவட்டங்களி லும் சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் தலைமையில் ஓணம் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

     கனகக்குன்றில் செப் டம்பர் 2ஆம் தேதி வரை ஐந்து இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 31 அரங்குகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும். நாட்டுப்புற கலைக ளை ரசிப்பவர்களுக்காக ஒவ்வொரு அரங்கமும் கலா வசந்தத்திற்காக காத்திருக் கின்றன. கனகக்குன்றில் தொடங்கப்பட்டுள்ள வர்த்த கம் மற்றும் உணவுத் திரு விழாக் கடைகள் கொண் டாட்டத்தை தூண்டும். தினமும் இரவு 7 மணிக்கு கனகக்குன்றில் லேசர் ஷோ வும் நடத்தப்படும். செப்டம் பர் 2 ஆம் தேதி வெள்ளை யம்பலத்தில் இருந்து தொ டங்கும் வண்ணமயமான ஊர்வலத்துடன் ஒரு வார விழா நிறைவுபெறும்.