திருவனந்தபுரம், பிப்.3- நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், “வளர்ந்துவரும் பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகளை தீர்ப்பதற்கான எந்த வழியையும் தேடவில்லை. கார்ப்பரேட் நிறு வனங்கள் தங்களது மூலதனத்தை மென்மேலும் குவிப்பதற்கே வழி ஏற்படுத்தியுள்ளது. பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதை உறுதிப் படுத்துகிறது. அவர்களை வலுப் படுத்துகிறது கேரள முதல்வர் பின ராயி விஜயன் குற்றம்சாட்டியுள் ளார்
ஒன்றிய பட்ஜெட் குறித்து பினராயி விஜயன் கூறியதாவது:
கேரளாவில் எய்ம்ஸ்-ரயில்வே வளர்ச்சிக்கு ஏதுமில்லை
வரவு-செலவு அறிக்கை பிராந்திய ரீதியாக சமநிலை யற்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளது. கேரளாவின் நீண்டகால கோரிக்கை மட்டுமல்ல உடனடித் தேவையான எய்ம்ஸ் இடம்பெறவில்லை. கேரளாவின் ரயில்வே துறை வளச்சி எந்த குறிப் பும் இல்லை. பட்ஜெட்டில் கேர ளத்தை ஏமாற்றிவிட்டனர். 2023-24-ஆம் நிதியாண்டில் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களின் உள்நாட்டு வரு வாயில் 3.5 சதவீதமாக இருக்கும் என்று ஒன்றிய நிதியமைச்சர் தெரி வித்துள்ளார். ஆனால், பட்ஜெட்டில் எந்தத்தளர்வும் அளிக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக் குறை 6.4 சதவீதமாக இருக்கும். கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களுக்கு குறைந்தபட்சம் நான்கு சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும் எனற் கோரிக்கை பரிசீலிக்கப்பட வில்லை. மூலதனச் செலவினங் களுக்காக மாநிலங்களுக்கான வட்டியில்லாக் கடன் இந்த ஆண்டும் தொடரும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. ஆனால், இதற்குப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கள் அதிகரித்து வருவதாக நிபுணர்களின் ஆய்வறிக்கை கள் உணர்த்துகின்றன. பெரும் பணக்காரர்களுக்கு நியாயமான வரி விதிக்க ஒன்றிய அரசிடம் எந்த நடவடிக்கையும் இல்லை.
100 நாள் வேலை நிதியில் வெட்டு
2021-22-ஆம் ஆண்டில் நிதி யாண்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ. 98,467.85 கோடி செலவிடப்பட்டுள் ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ. 89,400 கோடி ஒதுக்கப்பட்டது. 2023- 24 பட்ஜெட்டில் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அர சால் தொடங்கப்பட்ட முக்கியமான திட்டத்திற்கான நிதி படிப்படியாக வெட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீட்டில் வெட்டு
2021-22-ஆம் ஆண்டு சுகாதாரத் துறையில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்காக ரூ.15,097.44 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு இது ரூ.11,868.63 கோடியாக குறைந் தது. 2023-24 பட்ஜெட் ஒதுக்கீட்டில் இது ரூ.8,820 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது 2021-22-ஆம் ஆண்டு தேசிய சுகாதாரப் பணிக்காக ரூ.27,447.56 கோடி செலவிடப்பட்டது. 2022-23- ஆம் ஆண்டு இது ரூ.28,974.29 கோடி யாக அதிகரிக்கப்பட்டிருந்தது. 2023-24-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.42 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள தொகை ரூ.29,085.26 கோடி. ஒன்றிய பட்ஜெட்டில் மாநிலத் திற்காக ஒதுக்கப்பட்ட திட்டங்கள் அதிகபட்சமாக பயன்படுத்தப்படு வது உறுதி செய்யப்படும். கேரளா வுக்கு எந்தெந்த திட்டங்கள் பய னுள்ளதாக உள்ளன என்பதை சரி பார்க்க மாநில அரசு அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ளும். கேரள மாநிலத்தின் ரயில்வே மற்றும் இதர உள்கட்டமைப்பு மேம் பாட்டுத் திட்டங்களை ஒன்றிய அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டுமென வலி யுறுத்தினார்.