states

img

கேரள அரசு விலைவாசியை கட்டுப்படுத்துகிறது; ஒன்றிய அரசு மக்களுக்கு நெருக்கடியை தருகிறது

கொச்சி, ஆக.21-   ஒன்றிய அரசின் கொள்கைகளால் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கொச்சியில் கன்ஸ்யூமர் பெட் நடத்தும்  ஓணச் சந்தையின் மாநில அளவிலான தொடக்க விழாவில் முதல்வர் பேசினார். அப்போது அவர் மேலும் கூறுகையில், ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்கொள்வது கடினமாக இருந்தாலும் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டம் வலுவாக செயல்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தை இழிவுபடுத்தும் முயற்சி கள் பல்வேறு தரப்பில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. விலைவாசி உயர்வை அரசு தடுத்து வருகிறது. கேரளாவில் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை  விட குறைவாக உள்ளது. ஓணக் கால  விலை உயர்வை ஓணச் சந்தைகள்  கட்டுப்படுத்துகின்றன. இது மக்க ளுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. உணவு உற்பத்தியில் அரசு திறம்பட தலையிட முடிந்தது. தற்போது ஒன்றிய அரசு மாநிலத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. சில ஊடகங்கள் உண்மைகளை திரித்து வெளியிடுகின்றன. இவர்கள் நாட்டின் பொது விநியோக முறையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். விலைவாசி உயர்வுடன் வட்டிச் சுமை யையும் ஒன்றிய அரசு சுமத்துகிறது என்றும் முதல்வர் கூறினார்.