புதுதில்லி ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP), ஆக்ஸ் போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) அமைப்பு இந்தியாவின் வறுமை நிலைமை தொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ஆய் வறிக்கை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வறுமை நிலை, பல பரிமாண வறுமைக் குறி யீடு (MPI) மூலம் கணக்கெடுக் கப்பட்டதாகும். இதில் நாட்டி லேயே வறுமையை வென்று, வெறும் 0.71% வறுமைக் கோட்டு க்கு கீழ் உள்ள மக்களை கொண்ட மாநிலமாக மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி தலைமையில் இடது முன்னணி ஆளும் கேரளம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கேரள மாடலின் மற்றொரு பிரம் மாண்ட சாதனையாகும்.
தமிழ்நாட்டில் 4.89% பேர் வறுமைக்கோட்டின் கீழ்...
கேரளத்திற்கு அடுத்தபடியாக மிக சிறிய மாநிலமான கோவாவில் 3.76 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். சிக்கிம் 3.82 சதவீதமும், தமிழ் நாடு 4.89 சதவீதமும், பஞ்சாப் 5.59 சதவீதமும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை கொண்டுள் ளன. இந்த ஆய்வறிக்கையில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள மாநிலங்களில் கேரளா, தமிழ் நாடு மட்டுமே மிகப்பெரிய மாநிலங் கள் ஆகும். குறிப்பாக வறுமைக் கோட்டின் கீழ் குறைவான விகி தத்தை கொண்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியலின் முதல் 5 இடங்களில் பாஜக ஆளும் மாநிலம் ஒன்றே ஒன்று (கோவா) தான் உள்ளது. “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மூன்றும், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆளும் சிக்கிம் மாநிலமும் முதல் 5 இடங்களைப் பிடித்துள் ளன.
பாஜக ஆளும் மாநிலங்களில் வறுமை அதிகம்
வறுமை ஒழிப்பில் இந்தியா வில் மிகவும் பின்தங்கிய மாநில மாக பாஜக கூட்டணி ஆளும் பீகார் உள்ளது. ஒன்றிய அரசின் உதவி யின்றி தவிக்கும் ஜார்க்கண்ட் மாநிலம், பாஜக ஆளும் மாநி லங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மற்றொரு மாநிலமான மேகாலயா உள்ளிட்ட 5 மாநிலங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் என ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP), ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) அமைப்புகளின் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஐநா - ஆக்ஸ்போர்டு அறிக்கை யைப் போல நிதி ஆயோக்கின் அறிக்கையிலும் இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் உள்ளது. தாய்மார்களின் ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் என எல்லாவற்றிலும் பாஜக கூட்டணி ஆளும் பீகார் பின் தங்கியுள்ளது என நிதி ஆயோக் கின் அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. பீகாரை பாஜக, நிதிஷ் குமாரை கைப்பாவையாக பயன் படுத்தி தொடர்ந்து ஆண்டு வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.