states

img

இஎம்எஸ்ஸின் தொலைநோக்குப் பார்வையும் புரட்சிகர மனப்பான்மையும் புதிய கேரளம் படைத்திட ஊக்கமளிக்கிறது

திருவனந்தபுரம், மார்ச் 19- இஎம்எஸ்ஸின் தொலை நோக்குப் பார்வையும் புரட்சிகர மனப் பான்மையும் புதிய கேரளம் படைத்திட ஊக்கமளித்து வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட் டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மகத்தான தலைவர் இ.எம்.எஸ்.ஸின் 26ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கேரள முதல்வர் முக நூலில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று செவ்வாய் (மார்ச் 19) இ.எம்.எஸ் தினம்.

தோழரின் அரசியல் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் அதை பின் பற்றுவதற்கும் அவசியமான வர லாற்றுச் சூழல். தோழர் இ.எம்.எஸ்-இன் நினைவுகள், பாசிச கும்பலின் அழிவுக்கும், முதலாளித்துவத்தின் இதயமற்ற சுரண்டலுக்கு எதிராகவும் மனிதகுலத்தின் பாதுகாப்பை எழுப்ப நம்மைத் தூண்டும்.

வகுப்புவாத அரசியல் தனக்கான தனிக் கொடியை பறக்க விட முயற்சித் தாலும், ஜனநாயகம் மற்றும் மதச் சார்பின்மை ஆகியவற்றின் முன் மாதிரியான இடமாக கேரளம் நிலைத் திருப்பதில் தோழருக்கு தனிப் பங்கு உண்டு. நிலச் சீர்திருத்தத்தின் மூலம் நிலவுடைமை முறையை அழித்து நவீ னக் கல்விக்கும், மக்கள் நலனுக்கும் அடித்தளமிட்டு இன்று நாம் காணும் கேரளத்தை வடிவமைத்தவர்களில் அவருக்கு முக்கிய இடம் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஜன நாயகவாதிகள் அரசியல் சாசனம் முன்வைத்த இந்தியாவுக்காக போராடி வருகின்றனர். சங்பரிவாரின் அதிகார வெறி மற்றும் பணவெறிக்கு வலதுசாரிகள் அடிபணிந்து வருவ தால், இந்தப் போராட்டத்தை மேலும் உறுதியுடனும் கருத்தியல் நம்பிக்கை யுடனும் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு அதிகரித் துள்ளது.

அதற்கு தோழர் இ.எம்.எஸ் தந்த அரசியல் பாடங்கள் வழிகாட்டி யாக இருக்கும். இ.எம்.எஸ் என்கிற கம்யூனிஸ்ட் டின் அசாதாரண லட்சியமும் புரட்சிகர மனப்பான்மையும் புதிய கேரளத்தை நிஜமாக்குவதற்கான எல்டிஎப் அர சாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆற் றலை வழங்கி திசை காட்டுகிறது. மத நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் செழிக்கட்டும்; சமத்து வம் மற்றும் நீதியின் அடிப்படையில் உலகை நோக்கி முன்னேறுவோம். தோழர் இ.எம்.எஸ்ஸின் தெளிவான சிந்தனை அதற்கு வழிகாட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.