states

img

தனது கண்ணை இடித்துவிட்ட மாணவனை நேரில் சந்தித்து தட்டிக் கொடுத்த கேரள முதல்வர்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே மஞ்சேரியில் நடைபெற்ற “நவ கேரள சங்கமம்” நிகழ்ச்சியின் பொழுது என்சிசி மாணவர் ஒருவர் முதல்வர் பினராயி விஜயனுக்கு சல்யூட் அடிக்கும் பொழுது மாணவரின் கை முதல்வரின் கண்ணில் எதிர்பாராவிதமாக பட்டுவிட்டது. “முதல்வர் கண்ணில் பட்டுவிட்டதே!” என என்சிசி மாணவர் பதற்றமாக விழா மேடையில் இருந்து வெளியேறினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்பு முதல்வர் பினராயி விஜயன் தனது கண்ணில் இடித்துவிட்ட மாணவரை நேரில் சந்தித்து, “எனக்கு ஒன்றும் இல்லை, நீ தைரியமாக இரு... நன்றாக படி...” எனக் கூறினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.