states

img

பத்திரிகையாளரை அவமதித்த சம்பவம்

திருவனந்தபுரம், ஜுலை 6- கைரளி தொலைக்காட்சி செய்தியாளரிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவத்தில் பிசி ஜார்ஜ்  மீது திருவனந்தபுரம் அருங்காட்சியகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கட்சி ஜனபட்சம். இதன் தலைவர் பி.சி.ஜார்ஜ். இவர் பெண்கள் குறித்து பிற்போக்கு கருத்துக்களை கூறி பல்வேறு கட்டங்களில் விவாதத்துக்கு உள்ளானவர். அண்மையில் இவருக்கு எதிரான பாலியல் புகாரை காவல்துறையிடம் சோலார் வழக்கில் பிரபலமான பெண் அளித்தார். அதையொட்டி பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர் களிடம் பேசுகையில் புகார் அளித்தவரின் பெயரை வெளிப்படுத்தினார். இப்படி புகார் அளித்த பெண்ணின் பெயரை குறிப்பிடுவது தவறல்லவா என கைரளி டிவி செய்தியாளர் ஷீஜா கேட்டதற்கு, உங்கள் பெயரை குறிப்பிடட்டுமா என பி.சி.ஜார்ஜ் திட்டியுள்ளார். பிசி ஜார்ஜின் கருத்துக்கு ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பி.சி.ஜார்ஜுடன் இருந்தவர்கள் பத்திரிகையாளரை தாக்க முயன்றனர். இதுகுறித்து ஷீஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.