states

img

ஆங்கிலேயர்களை விட பாஜகவினர் மோசம்: மு.க.ஸ்டாலின்

ஆங்கிலேயர்களை விட பாஜகவினர் மோசம் என மாநில உரிமை பாதுகாப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மாநில உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் கன்ணூர் சென்றார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மாநாட்டில் ஒன்றிய- மாநில உறவுகள் எனும் தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ’அரசியலமைப்பு சட்ட வரம்பைக் கடந்து பாஜக தனது அதிகாரத்தை விரித்து செல்கிறது. அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் கூட ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கவில்லை, ஆனால் பிரிட்டிஷார் செய்யாததையே இந்த பாஜக செய்ய முயல்கிறது என பேசினார்.

;