இடுக்கி மக்களவை இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜிடம், ‘நீங்கள் எங்கள் ஊருக்காரர்’ என்று கூறி கட்டப்பனையில் தொழிலாளர்கள் வரவேற்றனர்.
தொழிலாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் போல் தேநீர் மற்றும் உணவு பரிமாறினர். காய் கறி விவசாயிகளின் பிரச்சனைகளை அவர் கேட்டறிந்தார். அவற்றுக்கு தீர்வு காண்பதாக ஜாய்ஸ் ஜார்ஜ் உறுதியளித்தார். கோவிலூர் மற் றும் வட்டவடயில் வேட்பாளருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித் தனர்.
பின்னர் மூணாறு சென்ற வேட்பாளர், சட்டப் பேரவை முன்னாள் துணை சபாநாயகரும், மூத்த தொழிற்சங்கத் தலைவரு மான சி.ஏ.குரியன் நினைவு மண்ட பத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் மக்களின் ஆரத்தி
வட்டவடயில் எல்டிஎப் வேட்பா ளருக்கு மக்கள் தமிழர் முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் நன்கு அறிந்த ஜாய்ஸ் ஜார்ஜ் அவர்களின் பெயர் சொல்லி பேசினார். தொழி லாளர்களின் அழைப்பை ஏற்று தொழிற்சாலைகளை பார்வை யிட்டு வேட்பாளர் திரும்பினார்.
முன்னாள் எம்பி ஜாய்ஸ் ஜார்ஜு டன் புகைப்படம் எடுக்க வயதான தாய் பழனியம்மா விருப்பம் தெரி வித்தபோது, வேட்பாளர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் புகைப் படமும் எடுத்துக் கொண்டார்.
தியாகி அபிமன்யுவின் பெற் றோரின் ஆசியுடன்எல்டிஎப் வேட் பாளர் ஜாய்ஸ் ஜார்ஜ் பய ணத்தை தொடங்கினார். அவர் அபி மன்யுவின் தாய் பூபதி, தந்தை மனோகரன் மற்றும் மூத்த சகோ தரர் பரிஜித் ஆகியோரிடம் விவ ரங்களைக் கேட்டறிந்தார். கீழே விழுந்ததில் காயமடைந்த அபி மன்யுவின் தந்தை மனோகரன் ஓய்வில் உள்ளார். அதனால் வேட் பாளருடன் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை யும் பகிர்ந்து கொண்டார். அபி மன்யுவின் குடும்பத்தினர் வேட்பா ளரை ‘வெற்றி நிச்சயம்’ என்று கூறி அனுப்பி வைத்தனர். பின்னர் வேட் பாளர் சுற்றுப்பயணம் ஞாயிறன்று தொடங்கியது.
எல்டிஎப் வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜுடன், சட்டமன்ற உறுப்பினர் ராஜா இருந்தார்.